ஆன்மீக வாழ்க்கை
326 Posts • 60K views
N Murugesan
741 views 23 days ago
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருத்தவத்துறை மேவிய சப்தரிஷீஸ்வரா போற்றி!! அனைவருக்கும் திருவாதிரை திருநாள் ஆருத்ரா தரிசனம் வாழ்த்துக்கள்!! #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
10 likes
7 shares
N Murugesan
698 views 27 days ago
என் இனிய நண்பர்களே, உனக்குத் தான் இந்த புத்தகம். படி, மனப்பாடம் செய். நீ ஒரு கணமும் துக்கப்படமாட்டாய். உனது பிரச்சனைகளுக்கு இதில் தீர்வு உண்டு. இது எந்த மதத்துக்கும் உரியது அல்ல. இது மனித சமுதாயத்துக்கானது. கீதை காந்திக்கு தாய். காந்தி தனது பிரச்சினைகளுக்கு இதிலிருந்து தீர்வு பெற்றார். நீயும் அவரை பின்பற்றி, மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழலாம். என் உயிர் நண்பனே நீ உடல் அல்ல ஆத்மா. உன் கஷ்டங்கள் உடலுடன் சம்பந்தப்பட்டது. நீ ஆத்மா என்று புரியும்போது எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். புறப்படு இந்த உலகை வெல்ல. பணம் பதவி பெரும் புகழ் எல்லாவற்றையும் அடைவாய்.... ஒரு நாள் இவை எல்லாம் தேவை இல்லையென விடுபடத் தயாராகு. ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய். ஒவ்வொரு நாளும் இந்த புத்தகத்தின் சில பக்கங்களை படி - கொலை கொள்ளை போன்ற செய்திகளை படித்து நிம்மதி இழக்காதே. உன் மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் புத்தகம் இது. நீ எந்தவித கவலையும் இல்லாமல் நூறு வருடம் ஆரோக்கியமாகவும் அமைதியோடும் வாழ். நீ இந்த உலகை மேலும் சிறந்த இடமாக மாற்று. உன்னுடைய தாய் தந்தை உறவினர் எல்லாம் உன்னால் பெருமை கொள்ளட்டும். உன்னை முன்உதாரணமாக்கி வாழட்டும். பேரன்புடன், பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ் †**†***††*********************************** எவ்வளவு அருமையான அற்புதமான முன்னுரை!! பரம பூஜ்ய ஷாந்தாராம் பண்டார்கர் மஹராஜ் - கேள்விப்பட்டது கூட இல்லை!! சனாதனத்தில் இப்படிப்பட்ட மகான்கள் மகாத்மாக்களும் இருக்கிறார்கள்!! - - "ஒரு விநாடி கூட நீ தனியாளல்ல, உன்னை நேசிக்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம். நீ நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களின் வெளிப்பாடே இந்த புத்தகம். விரைவில் இதே போல் நீயும் மற்றவர்களை நேசிப்பாய்."!! ******************** ஸ்ரீரங்கம் கோவிலில் க்யூவில் இருக்கிறேன் - இந்த பாக்கெட் கீதை புத்தகம் இலவசமாக ஒருவர் கொடுத்தார்!! இதற்காகவே கூட இங்கே வரலாம்!! ************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
13 likes
16 shares
N Murugesan
566 views 1 months ago
நேற்று தான் இதைப் பற்றி அறிந்தேன் - "ஏகாத்ம தாம்"!!😄 உலகையே துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்த துறவி ஒருவருக்கு 2000 கோடி ரூபாயில் 108 அடி உயர சிலை மற்றும் அத்வைத மையம்!! இது என்ன சாதாரண விஷயமா? இது அவர் பரப்பிய அத்வைத வேதாந்தத்தின் தாக்கம் தானே?!அவர் கொள்கையில் உண்மை எதுவும் இல்லாவிட்டால் இது சாத்தியம் அல்ல!! மறைந்த தேவாரத்தை சோழ மன்னன் வெளிக்கொண்டு வந்தது போல், உபநிடதங்களை நாம் அனைவரும் படிக்கும் வகையில் உலக நன்மைக்காக வெளிக்கொண்டு வந்தது ஆதி சங்கரரே என்று கூறுவோரும் உண்டு!! மேலும், "உலக மக்கள் அனைவரும் ஒன்றே" என்ற "அனைவரும் ஒரே ஆத்மனே" என்ற கொள்கையை பரப்புவதற்காக இந்த மையம் ("Statue of Oneness") என்று கூறுவதால், அப்படியே நடக்கும் என்று நம்புவோம்!! *************************************************"""" என் அத்வைத கொள்கை வேறு - அனைவரும் ஒரே ஆத்மன் அல்ல; ஒரே ஒரு ஆத்மன் மட்டும் தான் இருக்கிறது என்பதல்ல!! வெளியில் நாம் வெவ்வேறாக (இனம், மதம் , சாதி, மொழி, நாடு என்று) இருந்தாலும், உள்ளே அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆத்மனே!! பல எண்ணற்ற ஆத்மாக்கள் இருந்தாலும் இந்த ஆத்மாக்கள் அனைத்தும் ஒரே தன்மையது!! இதை முக்தியில் ஒவ்வொருவரும் கண்கூடாக உணரலாம்!! ஆகையால், ஒரு பிறவியில் காணும் மாற்றங்களை வைத்து ஏற்றத் தாழ்வுகளை கற்பிப்பது தவறு, நாம் அனைவரும் ஒரே தன்மையான ஆத்மன் என்பதே என் Oneness கொள்கை!!. ஆதி சங்கரர் கொள்கையல்லாமல் இந்த என் கொள்கை உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! 😄 ************************************************* அது போல் சைவ சித்தாந்தமும் ஆத்மனை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ஆத்மனுக்கு பிறகு தான் சிவம்; தச காரியம் இதைத் தான் கூறுகிறது; ஆத்மனை அடைவதும் சிவத்தை அடைவதும் ஒருங்கே நிகழ வேண்டும்; அவ்வளவு தான்!! மாறாக, "ஆத்மன் கிடையாது; ஆன்மா தான் உண்டு, அது கேவலமானது; அதற்கென்று தனி இருப்பு கிடையாது" என்று கூறினால், "நான் ஆத்மன், சிவத்தை தவிர யாருக்கும் பணிய மாட்டேன்" என்று கூறுவது முடியாது !! "கண்டவர்களையெல்லாம்" சிவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை தான் வரும்!! சைவம் அழிய, வேதாந்தம் செழிக்க இதுவும் ஒரு காரணம்!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
14 likes
14 shares