சிவபெருமானுடன் நான் ஊடலில் (கோபத்தில்) இருக்கிறேன். டைவர்ஸ் வரைக்கும் போகுமா அல்லது மீண்டும் பழையபடி ஆகுமா என்று தெரியவில்லை!😄 ************************************************* இளையராஜா எஸ்பிபி ஜானகி டூயட் பாடல் ஒன்றில் வரும் வரி எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும் - "கொஞ்சும் இன்பம் போல் உலகில் வேறு இன்பம் இல்லை!". அது போல் , ஆன்மீகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தும் இன்பம் போல் வேறு இல்லை. இந்த கொள்கை வைணவத்திற்கு மிகவும் பொருந்தும். அது போதாது; இறைவனுடன் இரண்டற கலத்தல் வேண்டும் - இது சைவம். ஆனால், காதலி கொஞ்சுவதற்கு கூட தடை செய்தால் எப்படி? அல்லது தடையை நீக்காமல் இருந்தால் எப்படி?; போதாத குறைக்கு தாயுமானவர் கோவிலுக்கு செல்லும் போது, வழியில் ஏன் பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டு வருகிறாய்? என்கிறான். இது எப்படி இருக்கிறது என்றால் "யாரினும் காதலம்" என்று வரும் திருக்குறள் போல். காதலன் காதலியிடம் கூறினானாம் - "மற்ற யாருடைய காதலையும் விட நம் காதல் தான் பெரிது; இதற்கு இணையில்லை". உடனே காதலி கோபித்துக் கொண்டு சென்று விட்டாளாம். ஏனென்று கேட்டால் "மற்ற யாருடைய காதலை விட " என்றால் உனக்கு வேறு காதலி உண்டு என்றல்லவா அர்த்தம் ஆகிறது என்றாளாம்!! 😄 சிதம்பரம் சென்றால் நடுநாயகமாக பெருமாள் சன்னதி இருக்கிறதே அது என்னவாம்?! ************************************************ காதலில் ஊடல் மிகவும் அவசியம். ஏன் தெரியுமா?! இதை திருவள்ளுவர் கூட சரியாக விளக்கவில்லை. ஆங்கிலக் காதலில் "there should be space distance, one should not be too possessive" என்பார்கள். அதாவது இருவருக்கும் இடையே ஒரு வகை இடைவெளி இருப்பது அவசியம். அப்போது தான் அவரவர்கான ஃப்ரீடம் சற்று சுதந்திரம் இருக்கும் என்பார்கள். அதாவது அப்படி distance இருந்தால் தான் அடிக்கடி சண்டை ஏதும் வராதாம். ஆனால், காதலர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர வேண்டும் என்று தமிழ் காதலுக்கு இலக்கணம் கூறுகிறது!! சிலர் குறளுக்கு உரை எழுதுவது போல் - "ஊடல் தான் பிறகு இன்பத்தை பெருக்கும்; அதற்காக காதலி ஊடல் கொள்வாள்" - ஊடல் இன்பத்தை பெருக்குவதற்காக அல்ல!! எதற்காக காதலர்களிடையே சண்டை வர வேண்டும்? நமது குறிக்கோள்- இரண்டற கலப்பது. அதற்கு உள்ள தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் (இரு பொருட்கள் சமாதி அடைய அந்த இரு பொருட்களும் ஒரே தன்மையாக வேண்டும்!!). இந்த சண்டைகள் தாம் இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள்; குற்றங்கள் ; தடங்கல்கள் போன்றவை வெளிப்பட கருவியாகிறது. ஒவ்வொரு ஊடல் நடந்து மீளும் போதும் ஒரு தடை விலகுகிறது. நெருக்கம் அதிகமாகிறது!! ஆங்கில காதல் போல் இருவருக்கும் இடையேயான வேற்றுமைகள் இங்கு பாதுகாக்கப் படவில்லை!! மாறாக, அந்த வேற்றுமைகள் ஒவ்வொன்றாக வெளிப்பட வெளிப்பட ஊடல்கள் ஏற்பட்டு, "இது உண்மையான காதலா? இது இந்த வேற்றுமையை வெல்லும் அளவுக்கு உறுதியானதா?" என்று டெஸ்ட் நடைபெறுகிறது!! அந்த வேற்றுமை கலையைப் படும் போது, ஊடல் நீங்கி, இன்பம் மேலும் அதிகரிக்கிறது - ஏனென்றால் இடைவெளி இப்போது மேலும் குறைந்து விடுகிறது!! இப்படியாக ஊடல்களே இரு காதலர்களை மேலும் மேலும் நெருங்க வைக்கிறது!! காதல் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள கூடாது!! ஆகையால் காதலுக்கு ஊடல் மிகவும் அவசியம் என்று காதலுக்கு தமிழ் இலக்கணம் கூறுகிறது!! ஆனால் ஒன்று: ஊடலை களைய முடியாத அளவுக்கு வேற்றுமை என்றால், பிரிவதே மேல் என்பதாலும் ஊடல் காதலுக்கு அவசியம். இணையவே முடியாத இருவர் முயற்சி செய்வதில் என்ன பயன்?! முயற்சியால் வரும் ஊடல் வேற்றுமையை நீக்கினால் அல்லவா இடைவெளி குறையும்?! ஆகையால், ஆங்கில காதல் போல் வேற்றுமைகளை, இடைவெளியை ("maintaining a distance"!😄) அப்படியே வைத்துக் கொண்டு முயல்வது உண்மையான காதல் ஆகாது!! ************************************************. ஆன்மீகத்திற்கும் இது பொருந்தும். இறைவனே ஆனாலும் தவறு என்றால் விலகி விட வேண்டும். இதுவே உண்மையை வெளிப்படச் செய்யும். கர்மங்களை களையும். இறைவனை அடைய உள்ள தடைகள் நீங்க வழிவகை செய்யும். தமிழ் கலாச்சாரத்தில் இறைவனுக்கே எதிராக போவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. நக்கீரர், வணங்காமல் சென்ற சுந்தரரின் சிவனையே தள்ளி வைப்பேன் என்று சொன்ன சிவனடியார் என்று உதாரணங்கள் பல உண்டு. இணையவே தேவையில்லை எனும் வைணவத்தில் ஊடலும் தேவையில்லை!!😄 இரண்டற கலப்பதை கொள்கையாக கொண்ட சைவத்தில் ஊடல் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று!! *****************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம