Rationalist
554 views
1 days ago
"...கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைய வேண்டும் என்கிற போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றபோதுதான் கொடிக்காலுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1982-ம் ஆண்டு மண்டைக்காடு மதக்கலவரம் ஏற்பட்டபோது குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்தியவர் கொடிக்கால். இலக்கியம் தொடங்கி அரசியல்வரை அவருக்கும் எனக்கும் பரிச்சயம் ஏராளம்” என்று கொடிக்கால் ஷேக் அப்துல்லா குறித்து நினைவுகூர்கிறார் மூத்த பொதுவுடமைப் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள். தெற்கு எல்லைப் போராட்டத்தில் ஈடுப்ட்டு சிறைசென்ற கொடிக்கால் ஷேக் அப்துல்லா, சமூகநீதி, சாதியொழிப்பு களத்தில் அயராது போராடியவர். சாதியொழிப்பு அரசியல் செயற்களத்தில் முன்னனியில் இயங்கிய பொதுவுடமைப் போராளியாக களம் கண்டவர். கக்கன் முதலாக இளையராசாவின் சகோதரர் பாவலர் வரையிலாக பல ஆளுமைகளோடு இயங்கியவர். காமராசர் காலம் முதல் இன்றளவும் அரசியல் போராட்டங்களோடு இணைத்துக்கொண்ட ஆளுமை. கொடிக்கால் செல்லப்பாவாக இருந்தவர், சாதி கொடுமை ஒழிய தம்மை இசுலாத்திற்குள்ளாக இணைத்துக்கொண்டவர். 93 வயதை கடந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக சிந்தனைகளோடு இயங்கும் தமிழ் உணர்வாளராக, எழுத்தாளராக, இடதுசாரியாக வாழும் ஆளுமை ஐயா கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களுக்கு 'அருந்திறல் தமிழர்' எனும் மே17 இயக்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குவதன் மூலம் நாங்கள் பெருமையடைகிறோம். சமூகநீதி, மதசகிப்புத்தன்மைக்கு நெருக்கடி ஏற்படும் இச்சமகாலத்தில், இந்த நலன்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி பங்களித்த ஆளுமையை இளையோர்களிடத்தில் கொண்டு சென்று, அரசியல் படுத்தும் வாய்ப்பாக இதை உணர்கிறோம். பெருக்கெடுக்கும் நன்றி உணர்வோடு மூத்த போராளிகளை கொண்டாடுவோம். இச்சான்றோர்களை கெளரவிக்க அனைவரும் குடும்பத்தாரோடு விருது நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கிறோம். தமிழ்த்தேசியப் பெருவிழா 2026 சைதை, சென்னை 08-03-2026 மாலை 5:30 மணி அன்புடன் அழைக்கிறோம். மே பதினேழு இயக்கம் #அருந்திறல் தமிழர் #கொடிக்கால் ஷேக் அப்துல்லா #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #✍️மே17 இயக்கக் குரல்