RamaswamyAnnamali
880 views
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் பிராணன் போகிற அல்பமான ஒன்று*’ என்று கொசுவை நிந்தித்தவன்*, ஒரு வழக்கிலே தோற்றுப் போய் ஊரை விட்டே ஓடினான்*. ஓடி ஓடிக் களைத்து ஒரு காட்டில் புதருக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிப் போனான். அவனுக்குரிய சிரச்சேத தண்டனையை வழங்குவதற்கென்று ராஜா பதினாறு குதிரை வீரர்களை அனுப்பி வைத்தான். அந்தப் பதினாறு வீரர்களும் காட்டுக்குள் நுழையும் நேரம் இவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இன்னும் அரை மணி பயணத்தில் அவர்கள் அவனை எட்டிவிடுவார்கள். அதன் பின் அவனுக்கு நேரக் கூடிய கதி என்ன? அந்த சமயத்தில் ‘உய்ங்’ கென்ற சப்தத்தோடு ஒரு கொசு பறந்து வந்து, தூங்குகிறவன் கன்னத்தில் சுரீரென்று ஒரு கடி கடித்தது. தூங்கிக் கொண்டிருந்தவன் ‘அப்பாடா!’ என்று துள்ளி எழுந்தான். விழிப்பு வந்ததால் தூரத்தில் குதிரைகள் வரும் சப்தமும் கேட்டது. ஓடி ஒளிந்து கொண்டவன் இதயத்தைப் பிடித்துக் கொண்டான். ‘கொசு சிருஷ்டி எதற்கு’ என்று அலட்சியமாய்க் கேட்டேனே; இன்றைக்கு அந்தக் கொசு இல்லையென்றால் என் கதி என்ன? கொசுவும் வேண்டும் – அதைக் காட்டிலும் அல்பமாய் ஏதேனும் ஜீவன் இருந்தால் அதுவும் வேண்டும்’ – இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டான் அவன். ஆகையினாலே, மனிதர்களான நாம் கொசு கடிக்காமல் பாதுகாப்பாய் வேண்டுமானால் இருக்கலாமேயொழிய ‘கொசு எதற்கு?’ என்று கேட்கலாகாது. அப்படிக் கேட்டால் என்ன ஆகும்? எல்லாக் கொசுவுமாகச் சேர்ந்து ஒரு சமாஜத்தை ஏற்பாடு பண்ணி, ‘நம்மை அடிக்கிற இந்த மனிதர்கள் எதற்கு? என்று கேட்க ஆரம்பிக்கும். ‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபம்’ என்கிறார் ஆதிசங்கர பகவத் பாதாள். நம்மையெல்லாம் (நரஜன்ம) ஜந்து (விலங்கு) கோஷ்டியில் தான் சேர்த்திருக்கிறார் அவர்! கொசுவாகட்டும், மனிதனாகட்டும்…. எல்லாமே ஜந்துக்கள் தான். ஆகவே ‘கொசு எதற்கு? என்று கேட்கும் அதிகாரம் நமக்குக் கிடையாது. அஹிம்ஸை என்பது ரொம்ப முக்கியம். ஒருத்தர் ‘விஷ்ணவே நம:’ என்று அர்ச்சனை பண்ணும் போது பகவான் எதை உவக்கிறான்..? அந்த நாமாவை மட்டும் அல்ல…அஹிம்ஸை என்கிற தர்மத்தைக் கடைபிடித்துக் கொண்டு அந்த நாமத்தைச் சொல்கிறாரே…அதுதான் பகவானுக்கு உவப்பு. நாம் கர்மானுஷ்டத்தோடு இருந்தால் தான் நம்மை அவன் ஏற்பான். புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ: இந்த்ரிய நிக்ரஹம் என்பது ரொம்ப முக்கியம். அஹோபிலமடம் நாற்பத்து நான்காவது பீடாதிபதி முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் வேடிக்கையாய் ஒரு நிகழ்ச்சி சொல்வார். சஹஸ்ரநாம பாராயணம் முடிந்ததும் கோவிலில் பிரசாத விநியோகம் நடந்ததாம். தோசை, சுண்டல் வினியோகம். அதை வாங்கிக் கொள்வதற்கு இரண்டு பேருக்குள் சண்டை வந்து விட்டதாம். இவர் கேசத்தை அவர் பிடிக்க, அவர் கேசத்தை இவர் பிடிக்க… கேசவனுக்கு எதிரே கேசத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். இந்த்ரிய நிக்ரஹம் அங்கே இல்லை. அவர்களால் நாக்கை அடக்க முடியவில்லை. ‘பிரசாதம் கொண்டு வந்து கொடுப்பார்கள். அமைதியாய் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லச் சொல்ல கேட்காமல் சண்டை! இத்தனை நேரமும் செய்த சஹஸ்ரநாம பாராயணத்துக்கே பிரயோஜனமில்லாமல் போய்விடுகிறதல்லவா! இந்த்ரிய யஜமானர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த்ரிய நிக்ரஹத்தை அடைந்து ‘புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ’ என்று சொல்லி அர்ச்சனை பண்ண வேண்டும். முக்கூர் ல்க்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்🙏