🏵️ஒரு நாள் ஒரு படித்த இளைஞன் ஒருவன்
பகவான் தரிசனத்திற்கு வந்தான்.
🏵️வந்தவன் சோபாவின் அருகே சென்று பகவானைப் பணிந்து விட்டு எதிரே உட்கார்ந்தான்.
🏵️அவன் முகத்தைப் பார்த்தால் பகவானிடம் ஏதோ கேள்விகள் கேட்க வந்தவன் போல் தோன்றியது.
🏵️ஹாலில் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள்.
🏵️அந்த மௌனத்தைக் கலைத்து எழுந்தது இளைஞனின் கேள்வி.
🏵️"சுவாமி, ராமகிருஷ்ண பரஹம்சர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகற்ப சமாதியில் நிலைப்பெறச் செய்தாரே!
🏵️அதுபோல் பகவானும் என்னை நிர்விகற்ப சமாதியில் நிலைபெறச் செய்ய முடியுமா? என்று கேட்டான்.
🌻பகவான் பதிலேதும் கூறவில்லை.
🏵️இளைஞனோ தன் கேள்விக்கு விடையை ஆவலுடன் எதிர்நோக்கினான்.
🌼சிறிது நேரத்திற்குப் பின் பகவான் அந்த இளைஞனைப் பார்த்து,
"🌼#கேட்பது_விவேகானந்தர்_தானோ!" #என்றார்.
🏵️அவ்வளவு தான் அவன் பதிலேதும் கூற முடியாமல் மௌனியானான்.
🏵️தன் கேள்வியே தனக்குத் தோல்வியாக முடிந்ததை உணர்ந்து சிறிது நேரத்தில் எழுந்து போய்விட்டான்.
🌻அந்த இளைஞன் எழுந்து வெளியே
சென்ற பிறகு பகவான் அதைப்பற்றித் தொடர்ந்தார்.
"🌼யாருக்கும் தன் நிலையைப் பற்றிக் கவலையேயில்லை.
🌼தான் எல்லம் உணர்ந்த பூரணன் என்பதுதான் அவர்களின் முடிவு.
🌼காரணம், தன்னைப்பற்றிய விசாரத்தில் மனம் சொல்லாததேயாகும்.
🌼மேலும், தன்னைப்பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக மனம் பிறரை ஆராயத் தொடங்குகிறது.
🌼இந்த ஆராய்ச்சி தான் சகல அனர்த்தங்களுக்கும் விபரீதங்களுக்கும் இடம் அளிக்கிறது.
🌼இந்தச் சாமியார் சோபாவில் உட்கார்ந்திருக்கிறாரே!
🌼இவரைச் சுற்றியும் நிறைய பேர் உட்கார்ந்து இருக்கிறார்களே!
🌼இவர் பெருமை தான் என்ன?
🌼நான் கேட்பதைச் செய்து காட்டுவாரா பார்க்கலாம்!" என்பதே அந்த இளைஞனின் நோக்கம்.
"🌼ஶ்ரீ ராமகிருஷ்ணரைப் போன்ற சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறதா என்பதை அறிய முற்பட்டானேயன்றி,
கேட்கும் தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை.
🌼ஏனென்றால், தன்னிடம் எல்லாத் தகுதியும் இருப்பதாக நினைப்பு.
🌼அதில் சந்தேகமிருந்தால் தானே அதைப்பற்றி விசாரணை எழும்.
🌼தான் விவேகானந்தரைப் போன்றவன்தானா என்னும் விசாரமிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமில்லை.
🌼ஶ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் ஒருவருக்குத்தான் அப்படிச் செய்தாரென்பதும் அவனுக்குத் தோன்றவில்லை.
🌼மனம் பிறரை ஆராய்வதை விட்டுத் தன்னை ஆராய முற்பட்டால் எந்தக் கேள்வியும் எழாது.
🌼எல்லாக் கேள்விகளுக்கும் சமாதானம் தனக்குள்ளேயே இருப்பதை அப்போது உணர்வான்" என்று கூறி முடித்தார்.
🌺பகவான் அருளிய இந்த உபதேசம் அந்த இளைஞனுக்கு மட்டுமே அல்ல.
🌺அவன்தான் எழுந்து போய் விட்டானே!
🌺நம் ஒவ்வொருவருக்கும் தான்.
🌺இந்த அரிய உபதேசம் அருளப்பட்டது.
🌺மனம் பிறரை ஆராயத் தலைப்படுவதைத் தடுக்க வேண்டுமானால்,தன்னை ஆராய்ந்து அடங்க வேண்டும்.
🌺இதுதான் நமது ஶ்ரீரமண பகவானது
தலையாய உபதேசமாகும்.
#ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய.🙏🙏🙏
#ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇 🚩🕉🪷🙏🏻
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #🙏ஆன்மீகம்