பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி

1K Posts • 52K views
பக்தர்: சமய உபதேசங்களை வெளியிட்டு நான் பிரச்சாரம் செய்கிறேன்.. ஜபம், கடவுள் புகழைப் பாடுதல், படித்தல் ஆகியவை செய்கிறேன்.. இதை தொடர்ந்து செய்யலாமா? வேறுவிதமாக சொன்னால், 'நான் யார்?' என்ற விசாரத்தைச் செய்யும் போது மேலே சொன்னவற்றைத் தொடர்ந்து செய்யலாமா? பகவான்: ஆத்ம விசாரத்தை விடாமல், இவற்றைத் தொடர்ந்து செய்ய முடியுமானால் நீங்கள் செய்யலாம்... பிராரப்தப்படி வேலை நடக்கும்... முதலில் ஜபம் போன்றவற்றின் காரணத்தை நீங்கள் அறிதல் வேண்டும்... இருந்தபடி இருங்கள்... உண்மை இயல்பு தான் ஜபம்... ஜபமும் கடவுளும் ஒன்றே.... பெயருக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இடையே ஒற்றுமை உண்டு... *ஸ்ரீ ரமண மகரிஷி...🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
21 likes
24 shares