மருந்து இல்லாத வைத்தியம்
( நீங்கள் இந்த வியாதிக்கு எந்தவிதமான மருந்தும் கொடுக்காமல், அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது தானாகவே போய்விடும்)
பகவானுக்கு முழங்கால்களில் வீக்கம், வலி - வாத நோய். அவரது அணுக்கத் தொண்டர்கள் அவரது முழங்கால்களில் தைலத்தைத் தேய்த்து அவரது கால்வலியைப் போக்க பலவிதத்திலும் முயற்சி செய்து வந்தனர்.
ஒருநாள் தொண்டர்கள் பகவானின் கால்களுக்குத் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தபோது
பகவான் வேடிக்கையாகக் கூறினார் : " உங்கள் வீட்டிற்கு விருந்தாளி ஒருவர் வருகிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அவரை அலட்சியம் செய்து சரிவர கவனிக்கவில்லையானால் அவர் கூடிய சீக்கிரம் உங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு விடுவாரல்லவா ?
ஆனால், நீங்கள் அவருக்கு அதிகமாக மரியாதை காட்டி,
அவர் தேவைகளை யெல்லாம் பூர்த்தி செய்து அவருக்கு உபசாரம் செய்தால் அவர் உங்கள் வீட்டைவிட்டுப் போகவே மாட்டார் !"
" இதைப் போலத்தான் வியாதியும் ;
நீங்கள் இப்போது என் கால்வலியைப் போக்குவதற்கு இப்படியெல்லாம் முயற்சி செய்து
அதைக் கவனித்தால்,
அது என்னைவிட்டு ஏன் போகும் ?
நீங்கள் இந்த வியாதிக்கு எந்தவிதமான மருந்தும் கொடுக்காமல்,
அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால்,
அது தானாகவே போய்விடும்.”
இது பகவானது வைத்தியம்,
மருந்து இல்லாத வைத்தியம் !
எவ்வித வைத்தியத்தையும் பகவான் விரும்பி ஏற்றதில்லை.
தமது உடலை தம் அடியார்களிடம் ஒப்படைத்து விட்டார்.
பகவானுக்குத்தான் உடலைப்பற்றிய கவலை இல்லையே !
அவர்தான் "உபாதிரஹிதன்' ஆயிற்றே...
ஸ்ரீ ரமண விருந்து
Page - 137 , 138
Ramana path 🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி



