ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
681 views
மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை அணுகியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுசித்ரா தனது இரண்டு மகள்களுடன் ஜோதிடரின் வீட்டிலேயே குடியேறினார். அங்கு ஏற்பட்ட மன உளைச்சலால் மூத்த மகள் தனது தந்தைக்குத் தம்மைக் காப்பாற்றும்படி செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து மகேஷ் தனது மகளை மீட்டு, அண்ணன் வசந்த் நாயக் என்பவரது வீட்டில் தங்க வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சுசித்ரா, அவரது தந்தை லோகநாத் மற்றும் ஜோதிடர் கமலாகர் பட் ஆகியோர் அடியாட்களுடன் வசந்த் நாயக்கின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டனர். சிறுமியைத் திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டிய அவர்கள், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினர். இதில் தனது தம்பியையும் அண்ணன் மகளையும் காப்பாற்ற முயன்ற வசந்த் நாயக் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சித்தாபுரா காவல்துறையினர், ஜோதிடர் கமலாகர் பட், சுசித்ரா உட்பட ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #📢பிப்ரவரி 4 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔