Jayakannan
698 views
1 days ago
ஞானத்தினால் என்ன நன்மை.? மனதில் இனம் புரியாத அமைதி ஏற்படும். புது தெம்பும் தெளிவும் பிறக்கும். உலகமே உன்னை தூக்கி எறிந்தாலும் தனிமை உன்னை சுடாது. உற்றார் உறவினர் நண்பர்கள் மனைவி மக்கள் என ... அனைவராலும் கைவிடப்பட்டாலும்.. தனித்து வாழக்கூடிய தைரியம் பிறக்கும். எதற்கெடுத்தாலும் துணைக்கு ஆள் தேடாமல் பூமியையே வலம் வரும் அளவிற்கு தைரியம் பிறக்கும். எது சரி எது தவறு என்கிற தெளிவு பிறக்கும். எது உண்மை எது பொய் என்கிற புதுவிதமான அறிவு சுரக்கும். அன்பு கருணை அமைதி என்கிற தூய சிந்தனை மலரும். அத்தியாவசியமான விஷயங்களை தவிர்த்து தேவையில்லாத ஆசையை புறந்தள்ள வைக்கும். தேவையில்லாத பொருட்களை அதிகம் சேர்ப்பதினால் நாமும் நம் குடும்பத்திற்கு ஒரு நாள் தேவையில்லாத பொருளாக ஆகி விடுவோம் என்கிற புரிதல் உண்டாகும். பற்றில்லாத வாழ்க்கையே பேரின்பத்தை அடையக்கூடிய நுழைவு வாயில் என்கிற உண்மை புரியும். பிறரை வசீகரிக்க கூடிய முகப்பொலிவும் தேஜஸும் உண்டாகும். வாழ்க்கையை பக்குவத்துடன் எதிர்கொண்டு வாழவைக்கும். அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அனைத்தையும் அசராமல் எதிர் கொள்ள வைப்பது மட்டுமல்லாமல்... பிறருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அதிர்ச்சி அலைவலைகளை போக்கக்கூடிய திறனும் ஏற்படும். இறுதியாக முடிவாக ... துன்பத்திற்கே துன்பம் தந்து ஆசைக்கே வெட்கம் ஏற்பட செய்து... தோல்வியையே குற்ற உணர்ச்சியால் கூனி குறுக செய்து. தனிமையையே தானாக நண்பனாக முன் வர செய்து.. மரணத்திற்கு பிறகு தனிமை என்கிற நண்பனோடு பயணிக்கச் செய்து. பிறருடைய வாழ்க்கையில் ஒளியை தரக்கூடிய ஆன்மாவாக பூமி உள்ளவரை ஜொலிக்க செய்யும். இப்படிப்பட்ட நிலைகளை ஒருவர் அடையப் பெறுகிறார் என்றால்... அவருடைய ஜாதகத்தில்.. லக்னத்தில் லக்ன புள்ளியில் லக்னாதிபதியுடன் ராசியில் ராசியாதிபதியுடன் பிறப்பு நட்சத்திரத்தில் தசாபுத்தி அமைப்பில் ஏதேனும் ஒரு வகையில் கேது பகவானின் தலையீடு நிச்சயம் இருக்கும். #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp 78100 22628