ஹெப்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பரமேஷ் என்ற கார் ஓட்டுநர், ஏற்கனவே விவாகரத்தான நிலையில் ஆஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மறுமணம் செய்துகொண்டார். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, காதல் மீது இருந்த நம்பிக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். தொடக்கத்தில் சுமூகமாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ஆஷாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றம் விரிசலை உண்டாக்கத் தொடங்கியது.
கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்த ஆஷா, கடந்த சில ஆண்டுகளாகத் தேவையற்ற காரணங்களுக்காகப் பரமேஷிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்திருக்கிறார். மனைவியின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்த பரமேஷுக்கு, ஒருகட்டத்தில் ஆஷாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆஷாவிடம் கேட்டபோது, “பிடித்தால் இரு இல்லையெனில் விவாகரத்து கொடுத்துவிட்டுப் போ” என ஆஷா அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஷ் ஆஷாவைத் தீவிரமாகக் கண்காணித்தபோது, அவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு நபருடன் முறையற்ற உறவில் இருப்பதைக் கண்டுபிடித்துக் கண்டித்துள்ளார்.
தங்கள் காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஆஷா, கடந்த ஜனவரி 31-ம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பரமேஷை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், எவ்வித பதற்றமும் இன்றி உறவினர்களிடம் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி, முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அடக்கம் செய்துள்ளார். யாரிடமும் பிடிபடாமல் நாடகமாடிய ஆஷா, கணவர் இறந்த இருபதே நாட்களில் தனது கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறாக முடிந்தது.
பரமேஷ் இறந்து சில நாட்களிலேயே ஆஷா மறுமணம் செய்துகொண்டது அவரது தங்கைக்கும் உறவினர்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் ஆஷாவைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கள்ளக்காதலனுக்காகத் தனது கணவனைத் திட்டமிட்டு கொலை செய்ததை ஆஷா ஒப்புக்கொண்டார். தற்போது ஆஷாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்தக் கொலையில் அவரது கள்ளக்காதலனுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #🎥மார்ச் 04 முக்கிய தகவல்🗞