RamaswamyAnnamali
3.4K views
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் சனிக்கிழமை* *சிறப்பு பதிவு* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *ஶ்ரீ: .....!!!* *ஸ்ரீ என்கின்ற மகாலட்சுமியை குறிப்பிடும் ஓரெழுத்துச் சொல்லுக்கு ஆறு அர்த்தங்கள் உண்டு.* 1. ஸ்ரீயதே: நம் எல்லோராலும் ஆஸ்ரயிக்கப்படுபவள் என்று பொருள். அவள் திருவடியைப் பற்றினால் உத்தமமான பலன் கிடைக்கும். அவளுக்கு தண்டிக்கவே தெரியாது. பற்றுவதற்கு எளிமையானவள். 2. ச்ரயதே: மகாலட்சுமி, தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். அந்த தாமரை மலரோ, பகவானின் திருவடிகளின் மென்மையோடு போட்டி போடுகின்றனவாம். மகாலட்சுமியின் மென்மையான கைகள் பட்டாலே அவன் திருவடிகள் கன்றிப் போய் விடுகிறதாம். அப்படிப்பட்ட பகவானின் திருவடிகளை, மகாலட்சுமி தன்னுடைய மென்மையான திருக்கைகளால் பற்றி வருடுகிறாள். பகவானின் திருவடிகளை சார்ந்து இருக்கிறாள். அவளை நாம் சார்ந்து இருக்கிறோம். ``ச்ரயதே’’ என்றால் பகவானை ஆஸ்ரயித்திருப்பவள் என்று பொருள். 3. ச்ருனோதி: நம் கஷ்டங்களைக் கேட்கின்றாள். ராமானுஜர் அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் என்றும் உலகத்துக்கும் தனக்கும் தாயாக பிராட்டியை சொல்லியிருக்கிறார். தாய் தன் குழந்தையின் துன்பத்தை எப்படிப் பொறுமையாக கேட்பாரோ, அப்படி மகாலட்சுமி கேட்பதால், அவரிடம் மன ஈடுபாட்டோடும், இயல்பாகவாவும், பிராத்தனை செய்கின்றோம். ``ச்ருனோதி’’ என்பதற்கு தன்னைத் தேடி வரும் அன்பர்களின் பிரார்த்தனையை முதலில் காது கொடுத்துக் கேட்கிறாள் என்று பொருள். 4. ச்ராவயதி: தான் கேட்பதைபோலவே பகவானை கேட்கச் செய்கிறாள். நம்முடைய பாவங்களையெல்லாம் போக்கி, சரியான சந்தர்ப்பம்பார்த்து பகவானிடம் நம்மை பற்றிச் சொல்லிக் காப்பாற்றுகிறாள். ``ச்ராவயதி’’ என்பதற்கு பகவானிடம் கேட்கச் செய்பவள் என்பது பொருள். 5. ச்ருணாதி: பாபங்களை நீக்குபவள் என்று பொருள். நமக்கு நன்மைகள் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் நாம் செய்த பாவங்கள் அல்லவா. கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால், அந்த அழுக்கை நீக்கினால் போதும், கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும். அதனுடைய உபயோகம் மேம்படும். அதைப்போலவே ஒருவருடைய பாவங்களைத் துடைத்துவிட்டால் அவருக்கு கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உதயமாகிவிடும். கண்ணாடியின் அழுக்கைத் துடைத்துச் சுத்தப் படுத்துவது போல, தன்னை வணங்குபவர்களின் பாவங்களைத் தீர்த்து அருள்புரிகின்றாள் என்பது இதற்குப் பொருள். 6. ச்ரீணாதி: ஒரு மனிதனுக்கு பக்குவம் இருந்தால்தான் அவன் தன்னை உணர்வான். தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் உணர்வான். தான் எதற் காகப் படைக்கப்பட்டோம் என்பதையும் உணர்வான். தனக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருப்பான். இப்படி தன்னை அண்டி நிற்பவர் களை பலவகையிலும் பக்குவப்படுத்தி அவர்கள் மற்றவர்களுக்கும் எம்பெருமானுக்கும் தொண்டு புரியும்படியாக நியமிப்பவள். ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்.✍🏼🌹