உன்னைச் சந்தித்த அந்த நொடிக்கே
மீண்டும் போக முடிந்தால்...
உன் முகம் பாராமல்
நிச்சயம் கடந்து போயிருப்பேன்...
ஏனோ தெரியவில்லை...
உனக்காக வீணடித்த மணிக்கணக்கான பேச்சுகள்,
உன்னை நினைத்தே கழிந்த பகல் பொழுதுகள்,
உன் நினைவில் கரைந்த கண்ணீர் இரவுகள்...
எல்லாம் இப்போது வெறும் சுமையாக...
உன் வாக்குறுதிகளை உண்மையென நம்பி
என் கனவுகளைக் கோட்டை கட்டினேன்,
இறுதியில் உடைந்த இதயத்தோடு
தனி மரமாய் நிற்கிறேன்...
நீ நான் விரும்பிக் கற்ற பாடம் அல்ல,
காலம் எனக்குக் கொடுத்த கசப்பான மருந்து,
ஒருவேளை நீ இருந்திருந்தால்... என்கிற
ஏக்கங்களை இன்றுடன் எரித்துவிடுகிறேன்...
கண்ணீர் காய்ந்துவிடும்...
காலம் ஓடிவிடும்...
ஆனால், உனக்காக நான் தொலைத்த
அந்தப் பொன்னான காலம் மட்டும்
இனி எனக்குத் திரும்பக் கிடைக்காது தானே #இன்பா ...✍️
மனால்றியா அம்மு #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓