சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த இந்த மீனவர் யார்? சுசில் யார்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்....!!
சென்னை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி (42)... இவரது மனைவி ஜமுனா (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சென்னை மீனவர் மனைவி
பார்த்திபன் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற நேரங்களில், அவரது மனைவி ஜமுனாவுக்கும் எதிர் வீட்டில் வசித்த சுசிலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பார்த்திபன், தனது மனைவியையும் சுசிலையும் பலமுறை எச்சரித்துள்ளார்.
ஆனாலும் அவர்கள் தங்களது தொடர்பைக் கைவிடவில்லை. இதன் காரணமாக ஜமுனாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கள்ளக்காதல் சம்பவம்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜமுனா, தனது கணவர் பார்த்திபனை விட்டுப் பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியாக வாழத் தொடங்கினார். தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கும், தனது குடும்பம் சிதைந்ததற்கும் சுசில் தான் முழுக்காரணம் என்று பார்த்திபன் கடும் மன உளைச்சலிலும் ஆத்திரத்திலும் இருந்துள்ளார்.
தான் மட்டும் தனிமரமாக இருக்கும்போது, சுசில் தனது மனைவி கிரிஜா மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்வது பார்த்திபனுக்குத் தாங்க முடியாத வன்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் பைக்
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு பார்த்திபன் நன்றாக மது அருந்திவிட்டு போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுசில் தனது பைக்கை பார்த்திபன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்ததாக தெரிகிறது. இதனால் தனது வாகனத்தை நிறுத்த முடியாமல் போன ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன், சுசிலின் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பார்த்திபன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசிலின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தினார்.
ஈசிஆர் கானாத்தூர் குப்பம்
கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிரிஜா, தனது கணவனைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், ஆத்திரம் தீராத பார்த்திபன் கிரிஜாவையும் கத்தியால் கொடூரமாகக் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கானத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுசிலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிமரம் - வாக்குமூலம்
தப்பியோடிய பார்த்திபனை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, "என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து செல்ல சுசில்தான் காரணம், அதனால் அவர்களைத் தீர்த்துக்கட்டினேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது பார்த்திபன் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரது உடல்களும் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பார்த்திபன், சுசில் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருபவர்களாம்.. ஆரம்பத்தில் ஒன்றாகவே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.. சுசிலுடன் ஜமுனாவுக்கு பழக்கம் அதிகரித்ததும்தான், இவர்கள் ஒன்றாக கடலுக்கு செல்லவில்லையாம்.. பார்த்திபன் தொழிலுக்கு போனதும் ஜமுனா, எதிர் வீட்டு சுசிலுடன் பேசி பழகியதும் அதிகரிக்க துவங்கியதாம்..!!
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளக்காதல் பண்ணலாம் வாங்க #கள்ளகாதல் விவகாரம் #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠