கள்ளகாதல் விவகாரம்

48 Posts • 77K views
புதுச்சேரி வில்லியனூர் அருகே ஊசுடு தொகுதி வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த 53 வயதுடைய அமுதா என்ற பெண், தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தனது மகன்களைச் சந்தித்துவிட்டு வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், அவரது மகன் வடிவேலு வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அமுதாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது தர்மபுரியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பரந்தாமன் என்பவர் சிக்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலை செய்தபோது அமுதாவிற்கும், பரந்தாமனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அமுதாவிற்கு பரந்தாமன் சுமார் 3.5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால், அமுதா ஹோட்டல் வேலைக்குச் சென்ற பிறகு பரந்தாமனுடனான தொடர்பைத் துண்டித்ததோடு, பணத்தைத் திருப்பித் தர மறுத்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அமுதாவை நயமாகப் பேசி இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் உள்ள ஒரு முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திட்டமிட்டபடி தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் அமுதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் விஜய்யின் உதவியுடன், அமுதாவின் உடலை அங்கேயே குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தப்பியோடியது விசாரணையில் அம்பலமானது. பரந்தாமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அமுதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய பரந்தாமன் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பணத் தகராறு மற்றும் கள்ளக்காதல் காரணமாக அரங்கேறிய இந்தப் படுகொலை புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம்
13 likes
14 shares
மைசூர் மாவட்டம் சரகுரு பகுதியில் கூலித் தொழிலாளி ஆன ஐவரப்பா என்பவர் கடந்த 16ஆம் தேதி சாலையோரம் பிணமாக கடந்தார்... முதலில் இது விபத்து எனத் தோன்றினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோதுதான் அந்த திடுக்கிடும் 'கள்ளக்காதல்' பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ஜவரப்பா தான் வேலை பார்த்து வந்த மேஸ்திரி சித்தேஷை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இந்த விவகாரம் ஜவரப்பாவுக்குத் தெரியவந்துள்ளது. மனைவியைக் கண்டித்த ஜவரப்பா, தங்களது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பார் என்று கருதிய அந்த ஜோடி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. திட்டமிட்டபடி, சித்தேஷ் தனது காரில் ஜவரப்பாவை மது குடிக்க அழைத்துச் சென்று, அங்கு அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போலச் சித்தரித்து உடலை வீசிவிட்டுச் சென்றுள்ளார். தற்போது கைதான அம்ருதா மற்றும் சித்தேஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
15 likes
11 shares