திருநீற்றுச் சுவடு
772 views
15 days ago
மிகவும் வித்தியாசமான நடராஜர்! அருள்மிகு மதுகேஸ்வரா திருக்கோயில்,பனவாசி, வட கன்னட மாவட்டம்,கர்நாடகா. மிகவும் வித்தியாசமான நடராஜர் திருவுரு புடைப்புச் சிற்பம். கதம்பர் வம்சம், கர்நாடகா வட கன்னட மாவட்டத்தின் வனவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அரச குலமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான சாளுக்கியர், இராஷ்டிரகூடர் போன்றவர்களின் படைத் துணையோடு தற்போதைய கோவா, கங்கல் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் கன்னடம் ஆட்சி மொழியாக இருந்து வந்தது. தமிழ் மொழியிலிருந்து கன்னடம் ஒரு தனி மொழியாக வளர்ந்ததற்குக் கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள்.கதம்பர் வம்சத்தை முதன்முதலில் ௩௪௫[ 345 ] ஆம் ஆண்டு தோற்றுவித்தவர் மயூரசர்மா ஆவார். கதம்பர்கள் இந்துமதத்தைச் சார்ந்தவர்களானாலும் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிறுவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டவையாகும். வனவாசியில் அமைந்திருக்கும் அருள்மிகு மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.இந்த ஆலயம் ௮ [ 8 ] ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கதம்பர்களின் முன்னோர் சங்ககாலத் தமிழகத்தைச் சேர்ந்த கடம்பர்களான இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அருள்மிகு மதுகேஸ்வரா ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் தேன் போன்ற நிறத்தைக் கொண்டது .அதனால் இதற்கு '' மதுகேசுவரா ''என்று பெயர் ஏற்பட்டது.[ மது -தேன்.] #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏 ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏