🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“ஜீவனும் மரணமும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது; அதை நேசிப்பவர்கள் அதன் கனியைச் சாப்பிடுவார்கள்.”*
— *நீதிமொழிகள் 18:21*
🎙️ *செய்தி*
நமது வாழ்வில் மிகவும் சிறிய உறுப்பாக இருக்கும் நாவுக்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. அதனால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். சமாதானத்தை உருவாக்கவும் முடியும், சண்டையை உருவாக்கவும் முடியும். ஒருவரை உயர்த்தவும் முடியும், ஒருவரை உடைக்கவும் முடியும். இரகசியத்தை காக்கவும் முடியும், அதை வெளிப்படுத்தி உறவுகளை குலைக்கவும் முடியும்.
*இன்று உலகத்தில் பலரின் வாழ்க்கை பிரச்சனைகளுக்குக் காரணம் கட்டுப்பாடற்ற வார்த்தைகளே.*
நம்முடைய வார்த்தைகள் நம்பிக்கையையும் உருவாக்கலாம்; அதேபோல் பயத்தையும் உருவாக்கலாம். நன்மையை பேசுகிறவன் நன்மையை அறுப்பான்; தீமையை பேசுகிறவன் தீமையை அறுப்பான்.
ஆகையால்
*இன்று முதல் உங்கள் நாவை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.*
பிறரை குற்றம் சொல்லவும், குறைபேசவும், நியாயம்தீர்க்கவும், அழவைக்கவும், சபிக்கவும் அல்ல; ஆறுதல் சொல்லவும், உற்சாகப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் பயன்படுத்துங்கள். *நாவடக்கத்தில் நடக்கும் போது தேவனுடைய நன்மைகளும் சமாதானமும் உங்கள் வாழ்க்கையில் பெருகும்.*
-- ✍️*சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்*
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏