திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கீழாந்தி வடிகால் வாய்க்கால் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் பவானியா மற்றும் கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஆகியோர் நேரடியாக சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை செய்தனர். போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கீராந்தி அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, சந்திரசேகர் என்பவருடன் உயிரிழந்த சுப்பிரமணியன் சென்றது தெரியவந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சையூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. சந்திரசேகரனும், சுப்பிரமணியனும் உறவினர்கள். சுப்பிரமணியனின் மனைவி இந்திராவுக்கும், பூஞ்சையூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகருக்கும் இடையே ரகசிய உறவு இருந்துள்ளது. இதை தெரிந்துகொண்ட சுப்பிரமணியன், இருவரையும் கடுமையாக கண்டித்து இருக்கிறார்.
: பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் சுட்டுக் கொலை... படுகொலை சம்பவத்தின் பின்னணி என்ன...?
இந்த நிலையில் சுப்பிரமணியனை கொலை செய்ய அவரது மனைவி இந்திராவும், சந்திரசேகரும் திட்டம் தீட்டி உள்ளனர். சம்பவத்தன்று சுப்பிரமணியனும், சந்திரசேகரனும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்திவிட்டு இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வரும்போது, அதிக மது போதையில் இருந்த சுப்பிரமணியனை தலையில் கல்லால் அடித்து வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் சந்திரசேகர்.
அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் மற்றும் இந்திரா ஆகிய இருவரையும் ஆலிவலம் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
#வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢 பிப்ரவரி 7 முக்கிய தகவல் 🤗