#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 ###motivationalquotes #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏 ஓம் நமசிவாய அநேக கோயில்களில் பாலிதீன் பைகளில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை தருகின்றனர். இது மிக மிக தவறான வழக்கம்.
கோவிலுக்கு செல்வோர் பூஜை பொருட்களை பித்தளை, எவர்சில்வர் அல்லது நார் கூடைகளில் பூஜை பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். பூஜை முடிந்த பின் தரும் பிரசாதத்தை துணிப்பையில் வைத்துக் கொள்ளலாம்.
எளிதாக இருக்கிறது என்பதற்காக பாலிதீன் பைகளை பயன்படுத்துவதும், அதை கருவறைக்குள் எடுத்துச் செல்வதும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று.
இதுபோல ஆண்கள் வழிபாட்டின் போது வேஷ்டி அணியும் வழக்கமும் வெகுவாக குறைந்துவிட்டது.
தற்போது பழமையான உணவு வகைகளை உண்ணும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. சிறுதானிய உணவுகளுக்கு என தனிக்கடைகள் வந்துள்ளன
இதே போல, கோவிலுக்குச் செல்லும் போதும் பழைய வழக்கத்தை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும். வேஷ்டி அணிந்து சட்டை இல்லாமல் உடலில் வெள்ளை நிற பருத்தித் துண்டை போர்த்திக் கொண்டு செல்வதன் மூலம் நமது பாரம்பரியத்தை பாதுகாக்கலாம்.
இனி கோவிலுக்கு செல்லும் முன் இந்த வழிமுறைகளை கடை பிடியுங்கள். இறை அருளை பெறுங்கள்.