N Murugesan
585 views
14 days ago
ஞானபீட விருது என்பது ஒரு தனியார் டிரஸ்ட் வழங்கும் விருதாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா). அரசாங்கம் வழங்கும் விருது இல்லையாம்!! பிறகு எதற்கு அதைப்பற்றி சர்ச்சை?! இந்த விருது 60 முறை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய செம்மொழி என்று பெருமைப் பேசப்படும் தமிழுக்கு இதுவரை எத்தனை முறை வழங்கப் பட்டுள்ளது தெரியுமா?! வெறும் இரண்டு முறை தான்!! என்னவொரு அக்கிரமம்!! இதைப்பற்றி ஜெயமோகன் இதற்கு முன் ஏன் பேசவில்லை?! தமிழில் இருந்து வந்த மொழி என்று கருதப்படும் கன்னட மொழி இது வரை 8 முறை பெற்றுள்ளது. மலையாளம் 6 முறை பெற்றுள்ளது; ஆனால் தமிழ் 2 முறை தான் (அதில் ஒன்று தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத "சித்திரப் பாவை" என்ற "முற்போக்கு" கதை எழுதிய யாரோ அகிலனாம்!!). இந்த அளவிற்கு தமிழ் மொழி "பாரதீய வித்யா பீடத்தால்" புறக்கணிக்க பட்டுள்ளது!! ஏன் யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை?! வைரமுத்து இந்த விருதை புறக்கணித்தால் தமிழுக்கு பெருமை!! 😄😂. ********************************************** மாறாக, ஏன் பாடலாசிரியருக்கு கொடுக்கப் பட்டது என்ற வாதம் சரியல்ல! கன்னடத்தில் நான்கு முறை கவிஞர்களுக்கு தான் கொடுக்கப் பட்டுள்ளது!! ஏன் தமிழுக்கு 2 முறை தான்?! புதுமைப்பித்தனில் ஆரம்பித்த "முற்போக்கு கலாச்சார சீரழிவை போற்றும், பெண்ணியம் பேசும்" வகையான "இலக்கியங்கள்" தமிழில் அதிகம்!! இவற்றுக்கு ஞானபீட விருது வழங்கப் படாதது எனக்கு சந்தோஷமே!! 😄 இலக்கியம் என்றால் அந்த சமூகத்தின் நல்ல விஷயங்களை வெளிப்படுத்தி அவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் (reinforce unique cultural values). சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து காண்பிப்பது மட்டும் தான் இலக்கியம் என்று யார் வரையறை செய்தார்கள் என்று தெரியவில்லை!! அவையும் கூட உண்மையான கலாச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப் பட்ட‌- "முற்போக்கு", "பெண்ணுரிமை", "வட்டார வழக்கு" - தவிர்த்த எழுத்தாளர்கள் யாரும் தமிழில் இல்லை என்றும் சொல்ல முடியாது!!😄😂😂 . சரி, அப்படி கன்னடத்தில் என்ன தான் எழுதினார்கள் என்று பார்த்தால், எல்லாம் "பாரதீய" மயமாக இருக்கிறது!!😄. கன்னட கலாச்சாரத்தை விட "வேத கலாச்சார" நூல்களாக இருக்கிறது!! கன்னத்தில் பரிசு பெற்ற சிலர் படைப்பை பார்ப்போம்!! குவெம்பு என்பவர் எழுதியது நவீன ராமாயணம். கோகக் என்பவர் எழுதியது வேத காலத்தை பற்றிய கவிதைகள்!! யூ ஆர் அனந்தமூர்த்தி எழுதியது ஆச்சாரமான பிராமணர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!! வெங்கடேச ஐயங்கார் எழுதியது பிரிட்டிஷ்க்கு எதிரான மன்னர் பற்றியது! சிவராம் கரந்த் என்பவர் எழுதியது மனித வரலாற்று தொன்மம், கிரீஷ் கர்னாட் துக்ளக் பற்றிய வரலாற்று கதை - ஆக இவை எவையும் கன்னட கலாச்சாரத்தை புரிந்து கொள்ள உதவாது!! இது போன்ற "இலக்கிய படைப்புகள்" தமிழில் இல்லை தான்!! இப்போது "பாரதீய சனாதனத்துடன்" தமிழை இணைக்க இந்த விருது!! எனக்கு வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் போன்றவை இலக்கியமாக தோன்றியதும் இல்லை - தமிழை வலுப்படுத்தாமல் வட்டார கொச்சை மொழிகளை உபயோகக்கும் நாவல்கள்!! ஆக, வைரமுத்து தகுதியானவர் என்றாலும் ஜெயமோகன் கூற்றிலும் சிறிது உண்மை உள்ளது!!! ஆனாலும், ஜெயமோகன் சற்று வரம்பு மீறி பேசி விட்டார் என்றே கூற வேண்டும். #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம