சிவமணியம்
கேள்வி: உலக அனுபவத்தோட
ஆத்மானுபவத்திலே இருக்க
முடியுமா?
பகவான்: இருக்கறது ஒரே அனுபவந்தான்.
உலக அனுபவம்ன்னா என்ன?
ஒரு போலி 'நான்' மேலே கட்டப்பட்டிருக்கற அனுபவங்கள் தான்.
ரொம்ப உலக அனுபவமான ஆள்கிட்டே..... நீ யார்ன்னு தெரியுமான்னு கேட்டா..... தெரியாதுன்னுதான் சொல்லுவான்.
நம்மளத் தெரியாமே..... எதைத் தெரிஞ்சு என்ன ஆகப்போறது?
எல்லா உலக அறிவும் சாரமே இல்லாததுதான்.
கேள்வி: போலி நான்ல இருந்து உண்மையான நானை எப்படி பிரிச்சு அறியறது?
பகவான்: நான் இல்லேன்னு யாராவது சொல்லுவாளா?
சொல்ல முடியுமா?
தன்னோட இருப்பை யாராவது சந்தேகிக்க முடியுமா?
எல்லோருக்கும் சந்தேகமே இல்லாம அனுபவமாயிருக் கறதைத் தெரியலேன்னு சொல்றோம்.
இது பெரிய புதிர்.
கேள்வி: மனதை எப்படி அடக்கறது ?
பகவான்: நான்கற எண்ணம்தான் மனசு.
நான் யார்ன்னு விசாரம் பண்ணினா... நான்னு ஒண்ணும் மிஞ்சாது.
ஆத்மாவே மிஞ்சும்.
இப்படித்தான் மனதை அடக்கணும்.
அதை விட்டுட்டு... நான் ஏதோ உண்மை பொருள், அது
எதையோ சிந்திக்கறது, அதை அடக்கப்போறேன்னு கிளம்பி டறது.... 'நான்'கறத அடக்க, 'நான்'கறதே கிளம்பிடறதுதான்.
அதாவது மனசை வச்சே மனசை அடக்கறது.
திருடன் ஒருத்தன்... அவனைப் பிடிக்கறதுக்கு அவனே போலீஸ் ஆனானாம்.
மனம் எப்பவுமே தன்னை மறைச்சு வெளிப்படும்.
கேள்வி: ஆத்மா விசாரத்துக்கு ஏகாந்தம் அவசியமா?
பகவான்: எல்லாம் ஏகாந்தந்தான்.
ஜீவன் எப்போதும் ஏகந்தான்.
நம்மள உள்ளே தேடணும்.
வெளியே தேடக்கூடாது.
கேள்வி: உலக விவகாரங்கள் திசை திருப்பிடுது? என்ன செய்ய?
பகவான்: திருப்ப விடாதேள்!
கவனம் சிதர்றப்போ எல்லாம் விசாரம் பண்ணுங்கோ!
யார் திசை திரும்புறான்னு... கவனம் சிதர்றப்ப... விசாரம்
பிறக்கணும்.
விசாரம் பிறக்க ஆரம்பிச்சுடுத்துன்னாலே... குருவருளுக்கு
பாத்தியமாயிட்டோம்ன்னு அர்த்தம்.
கொஞ்சம் பயிற்சியிலே எல்லாம் சரியாயிடும்.
கேள்வி: அங்கதான் விசாரம் வரமாட்டேங்குது? ரொம்பக் கஷ்டமா இருக்கு.
பகவான்: செய்யுங்கோ. வந்துடும்.
ஒரு கஷ்டமும் இருக்காது.
கேள்வி: நான் யார்ன்னு விசாரம் பண்ணினா... ஒரு பதிலும் வர மாட்டேங்குதே?
பகவான்: ஒரு பதிலும் வராது.
விசாரிதான் பதில். அவன்தான் மிஞ்சுவான். என்ன மிஞ்சறதோ அதுதான் பதில்.
புதுசா எது வந்தாலும்... அது உண்மை கிடையாது. போயிடும்.
எப்பவும் இருக்கறதுதான் உண்மை.
பக்கம்: 55 - 57
அப்பனேஅருணாசலம்.
🚩🕉🪷🙏🏻
#பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #மண்ணில் வாழ்ந்த மகான்கள் #🙏 பக்தி போதனைகள்