போர்க்கைதிகள் கொண்டுவரப்பட்டபோது, ஒரு தாய் தன் குழந்தையைத் தேடி அலைந்து, அதைக் கண்டதும் மார்போடு அணைத்து பாலூட்டினாள்.
"இந்தத் தாய் தன் குழந்தையை நெருப்பில் வீசுவாள் என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று முஹம்மது நபி(ஸல்) கேட்டார்கள். அதற்குத் தோழர்கள் "இல்லை" எனப் பதிலளித்தனர்.
"இந்தத் தாய் தன் குழந்தையின் மீது காட்டும் கருணையை விட, அல்லாஹ் தன் அடியார்களின் மீது அதிகக் கருணை உடையவனாக இருக்கிறான்" என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உமர் இப்னு கத்தாப் (ரலி).ஸஹீஹ் அல்-புகாரி 5999
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️#🕋 மாஷா அல்லாஹ் 💖#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்#🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️