வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கவிதா என்ற அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் கணவன் விஜய்க்குத் தெரியவரவே, அவர் மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, தனது கணவனையும் மாமியாரையும் தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரகசியத் திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டத்தின்படி, கவிதாவின் மாமியார் நிர்மலா மட்டும் வீட்டில் இருந்த சமயம் பார்த்து, கத்தி மற்றும் மிளகாய்ப் பொடியுடன் வந்த அந்தச் சிறுவன் அவர் கண்களில் காரத்தைத் தூவி கழுத்தை அறுக்க முயன்றுள்ளான். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அந்தச் சிறுவன் தப்பியோடிவிட்டான். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாமியார் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த 17 வயது சிறுவனைப் பிடித்துச் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தலைமறைவான கவிதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்; பெத்த பிள்ளை வயதில் இருக்கும் சிறுவனுடன் சேர்ந்து மாமியாரைக் கொல்ல முயன்ற இந்தப் பெண்ணின் அராஜகம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢பிப்ரவரி 9 முக்கிய தகவல் 🫠