🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“இயேசு அவர்களிடம்: பானைகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பி வழியுமட்டும் நிரப்பினார்கள். பின்னும் அவர்: இப்போது எடுத்து விருந்தின் அதிகாரியிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டு போனார்கள். தண்ணீர் திராட்சரசமாக மாறியதை விருந்தின் அதிகாரி அறிந்தபோது மணமகனை அழைத்து: எல்லாரும் முதலில் நல்ல திராட்சரசத்தை வைத்து, ஜனங்கள் நன்றாகக் குடித்தபின் குறைந்ததை வைப்பார்கள்; நீயோ நல்ல திராட்சரசத்தை இப்போது வரை வைத்திருந்தாய் என்றான்.”*
— *யோவான் 2:7-10*
🎙️ *செய்தி*
கானாவூர் கல்யாண வீட்டில் நடந்த இந்த அற்புதம்,
இயேசு கிறிஸ்துவின் முதல் அற்புதமாகும்.
அந்த வீட்டில் திராட்சரசம் இல்லாமல் போனது ஒரு பெரிய அவமானமாக இருந்தது.
ஆனால் அந்த குறைவின் நேரத்தில் இயேசு இருந்ததால்,
அந்த குறைவு ஆசீர்வாதமாக மாறியது. நம்மிடம் இல்லாததை சொல்லி அவமானப்படுத்தும் உலகில் நாம் வாழ்கிறோம் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக மாற்றி அவமானமான சூழ்நிலையை புகழ்ச்சியாக மாற்றுகிறார்.
பானைகளில் இருந்தது சாதாரண தண்ணீர் தான்.
ஆனால் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது
அந்த தண்ணீர் மிகச் சிறந்த திராட்சரசமாக மாறியது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: இயேசு நம் வாழ்வில் இல்லை என்றால் வெறுமையான வாழ்க்கையாக இருக்கும் ஜீவ தண்ணீரால் நிரம்ப படும் போது நம் வாழ்வு எல்லோராலும் விரும்பப்படுகிற அழகான அற்புதமான வாழ்வாக மாறுகிறது.
நம்முடைய வாழ்க்கையில் குறைவு, வெறுமை, அவமானம் இருந்தாலும்
இயேசுவிடம் ஒப்படைத்தால்
அவர் அதை ஆசீர்வாதமாக மாற்றுவார்.
இயேசு இருக்கும் இடத்தில்
குறைவு இருக்கவே இருக்காது,
குறைவு நிறைவாகவும்,
துக்கம் சந்தோஷமாகவும்,
சாதாரணம் அற்புதமாகவும் மாறுகிறது.
இன்று உங்கள் வாழ்க்கையில் எந்த குறைவு இருந்தாலும்
அதை கர்த்தரிடம் ஒப்படையுங்கள். உங்கள் குறைவுகளை நிறைவாக மாற்றுவார்,
அவர் உங்கள் தண்ணீரை
திராட்சரசமாக மாற்ற வல்லவராக இருக்கிறார்.
-- ✍️ *சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்*
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏