#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
வென்றார் கமல்......! நின்றார் தமிழ்த்தாயின் தவப்புதல்வனாக...! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு... வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்...! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்...! தாய்மொழி தமிழ் பற்றி உணர்வை உசுப்பி விடுகின்ற இத்தகைய சொற்றொடர்கள் ஏராளம்! இவற்றை எல்லாம் மிஞ்சி நின்றது ராஜ்யசபையில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு. அவர் பயன்படுத்திய வார்த்தை தொகுப்பு... வசனத் தொடர் சூப்பரோ சூப்பர்...! தமிழ் என்றுமே பிச்சை எடுக்காது... நீங்கள் தரும் பிச்சையையும் ஏற்காது! உம் வினை உம்மை சுடட்டும்... ஓட்டப்பம் வீட்டை சுடட்டும். நீவிர் வீழ்க நலமுடன்... தமிழ் வாழும் புகழுடன்... என்ற சாபம் கலந்த கமலின் கன்னிப் பேச்சு அவரை உச்சாணியில் அமர வைத்துள்ளது. படிப்பு வராத ஒரு மாணவனை பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஆசிரியர் சொன்னால்..... உடனே மாடு மேய்க்கிற தொழிலை கேவலமாக பேசிவிட்டார் ஆசிரியர் என்று கூறுவது சரியாகாது. அது ஒரு உதாரணம் மட்டுமே! ஓமம்... வேதம்.. பூஜை... புனஸ்காரம்... கல்யாணம்... கருமாதி போன்ற எல்லா கருமங்களுக்கும் நமக்குத் தெரியாத ஒரு மொழியே பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கோபத்தில் ஒருத்தர் சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதை திரிச்சு ஒரு மொழியை கேவலப்படுத்துவது அழகல்ல. அதற்கான தன் பதிலையும் தன் தண்ணிப் பேச்சிலேயே கமலஹாசன் அழகாக சொல்லிவிட்டார். நான் கேட்கிறேன் தங்கையே தமிழனின் செங்கோல் உங்களுக்கு இனிக்கிறது. தமிழ் மொழி மட்டும் கசக்கிறதா? ஜி யு போப் போற்றிய தமிழ்... வீரமாமுனிவர் எழுதி மகிழ்ந்த தமிழ்.... தனி நாயக அடிகள் உலகெங்கும் பரப்பிய தமிழ்
.. கம்பனும் வள்ளுவனம்பாடி மகிழ்ந்த தமிழ்... நக்கீரன் சிவனை மடக்க பயன்பட்ட தமிழ்... அருணகிரியார் மூலம் முருகன் வளர்த்த தமிழ்.. மாணிக்கவாசகர் பாடியதை தன் கரங்களால் சிவன் எழுதி சிதம்பரத்தில் பாதுகாத்த தமிழ்... ஏட்டில் இருந்ததை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அச்சில் ஏற்றி நூல் வடிவில் அய்யர் அடுத்த தலைமுறைக்கு அளித்த தமிழ்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றி இன்று வரை கோலோச்சம் தமிழ்... வரப்புயர என்ற ஒற்றை வார்த்தையில் மண்ணுக்கும் மன்னனுக்கும் உள்ள தொடர்பை அவ்வை சொன்ன தமிழ்... ஒரு இனத்துக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் வைத்திருக்கும் அபூர்வ மொழி தமிழ்... திருமந்திரம் திருக்குறள் நிகண்டு ஐம்பெரும் காப்பியங்கள் அத்தனையிலும் நாடித்துடிப்பிலிருந்து நாடாள்வதற்கு வேண்டிய அனைத்தையும் வரைமுறைகளாக வரையறுத்து வைத்திருக்கும் தமிழ்.... எரி தணலென... சுதந்திரத்துக்காக பாரதி முழங்கிய தமிழ்... எம் பகைவர் எங்கோ மறைந்தார் என பாரதிதாசன் பாடிய தமிழ்... தம்பி! உனக்கு எதற்கும் யார் உதவியும் தேவையில்லை. அனைத்தும் உன் மொழியில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே மொழி வழி வாழ்..
என பேரறிஞர் அண்ணா சொன்ன தமிழ். இன்று ராஜ்யசபையில் கமல் மீண்டும் அரங்கேற்றியுள்ளது பாராட்டப்பட வேண்டியது. வி சி குகநாதன்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #வீழ்க_வளமுடன்