மக்கள்நீதிமய்யம்

1K Posts • 875K views
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மடிவது சுற்றுசூழல் ஆபத்தைநமக்கு எச்சரித்துள்ளது #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடம் சென்று எச்சரித்திருந்தார் @cmotamilnadu உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் @maiamofficial @ikamalhaasan #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
12 shares
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial எண்ணூரில் ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறப்பு ! உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் ! சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக, கொசஸ்தலை ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தான் மீன்கள் இறப்பதாகக் கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இறந்த மீன்களைச் சேகரித்த மீன்வளத் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே , மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் . தகுந்த காரணத்தை அறிந்து இது போன்று மீண்டும் நடக்காதவாறு ஆறுகள் மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். #environment #ennoor #chennai #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
11 shares
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில், 80-ஆம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாட்டம் நமது தேசத்தின் 80-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம் இன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிலையத்தில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கட்சியின் துணைத்தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி, வாழ்த்துரையாற்றினார். அத்துடன் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா IPS (Rtd) அவர்களும், மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்களும் சிறப்புரையாற்றினர். விழாவில், மாநிலச் செயலாளர்கள் திரு. S.B.அர்ஜுனர், திரு. லக்ஷ்மன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மண்டல அமைப்பாளர்கள் திரு. சேகர், திரு. ரூபலிங்கம், திருமதி. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. சைதை ஜெ.கதிர், திரு. மாறன், திரு. தனபாலன், திரு. தேசிங்குராஜன், திரு. கோவிந்தராஜன், திரு. பாலமுருகன், ஆகியோருடன் மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் திரு. மாடசாமி, திரு. யுவராஜ் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #IndependenceDay #15August
10 shares