நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
701 views • 2 days ago •
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial
எண்ணூரில் ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறப்பு !
உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் !
சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக, கொசஸ்தலை ஆற்றில் ஆயிரக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தான் மீன்கள் இறப்பதாகக் கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த மீன்களைச் சேகரித்த மீன்வளத் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வின் முடிவுகள் வெளிவந்தால் மட்டுமே , மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் .
தகுந்த காரணத்தை அறிந்து இது போன்று மீண்டும் நடக்காதவாறு ஆறுகள் மற்றும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
#environment #ennoor #chennai
#KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
11 shares