SakthiSure
733 views
4 months ago
மாமா என்ற வார்த்தையை சொல்லும்போதே அவள் நினைவுகள் பின்னே சொல்ல ... அவனின் அந்தப் பார்வை மட்டும் நினைவுகளில் ... அதை உயிர்பிக்கும் விதமாக ... என்னம்மா செய்ங்க ... சத்யா அம்மா ... ஐயர் கூப்பிடறாங்க ... ம்ம் ... சிவகுருமார்கள் ... சித்தர்கள் ... ஞானிகள் ... நல்ல ஆத்மாக்கள் ... இவர்கள் எல்லாம் சேர்ந்து ... நம் முன்னோர்களுக்கு அடைவதற்கு .. நீங்க தான் உதவி பண்ணனும்னு சொல்லி வேண்டிக்கோங்க ... ம்ம் ... இப்படி வச்சுக்கோங்க .... ஆண்களாக இருந்தால் வலது கை ... பெண்களாக இருந்தால் இடது கை ... அதுல கொஞ்சூண்டு கருப்பு எள் எடுத்துக்கோங்க . . அதுல கொஞ்சூண்டு தண்ணி விட்டுக்கோங்க ... அதுக்கு முன்னாடி நீ யாருக்கும் முதல்ல சொல்லணும் ... உங்க அம்மாவா இருக்கிறாங்கன்னா அவங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் செய்யணும் ... முதல் அம்மாவுக்கு பூ வச்சுக்கோங்க ... அம்மா இருக்காங்களா ... அப்போ ! உங்க அம்மா வழிக்கு இருப்பாங்களா ??? ... அம்மா அம்மாவுக்கு அவங்களுக்கு பண்ணிக்கலாம் .. ம்ம் ... அதுக்கப்புறம் உங்களுடைய பெரு விரல்ல பின்னத்து மேல வச்சுக்கிட்டு ... தாய் வழிக்கும் தாய் வழி முன்னோர்களுக்கும் இந்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு ... என்னையும் என் வம்சா வழியையும் அருள் புரியவும் வேண்டிக்கோங்க ... ம்ம் ... இதே மாதிரி மூணு வாட்டி செய்யணும் ... ம்ம் ... அடுத்து உங்க அப்பாவுக்கு ... இப்ப சொன்னேன்ல அதே மாதிரி செஞ்சிடுமா ... ம்ம். .. அடுத்து உன் தங்கைக்கு ... அதே மாதிரி ... ம்ம் ... அடுத்து இந்த நாலாவது பிண்டம் .. மாமாவுக்கு ... அம்மா கூட பொறந்தவங்களா ... இல்ல அப்பா வழியா ??? ... ம்ம் .... என்னோட புருஷனுக்கு ... என்னோட ஆதிக்கு ... என்று சொல்லும் போதே அருகில் இருந்தது கேட்டுக் கொண்டே இருந்த கிரிஷ்க்கோ ... நிலமே சரிந்து கீழே விழுவது போல இருக்க ... அவன் மனமோ ஒரு நிலை போல இல்லை ... அவளின் இந்த வார்த்தைகள் மட்டும் காதுகளில் ரீங்காரமிட்டு ஒலிக்க ... அவனின் சப்த நாடியும் ஒரு நிமிடம் இயங்க மறுத்தது ... அதை உயிர்ப்பிக்கும் விதமாக ... அவர் இல்லையாம்மா ... இல்ல உயிரோட இல்ல ... என்னோட ஆதி இப்ப என்கூட இல்ல ... என் கூட யாரும் இல்லை .... என்று சொல்லும் போதே .... அவளின் வார்த்தைகள் உள்ள வழிகளை புரிந்து கொண்டவர்களோ .... மேலும் அவளை சோதிக்காமல் ... என்ன மன்னிச்சிடு மா ... ஒருத்தரோட உயிர் மட்டும் தான் பிரியுமே தவிர .... ஆன்மா இந்த உலகத்தை சுத்தி தான் இருக்கும் ... உன் கூட தான் இருக்காங்க பயப்படாதே .. ம்ம் ... அடுத்து கருண கர்மா ... அது வந்து தாய் வழி தந்தை வழி அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு .. இது நம்ம செய்றோமா ... அதே மாதிரி செஞ்சிடு ... ம்ம் ... அதுக்கப்புறம் உன்னுடைய பிண்டத்துல சாந்தி ... சாந்தி ... என்று சொல்லி தண்ணி ஊத்திக்கணுமா .. மூணு வாட்டி ... ம்ம் .... அதுக்கப்புறம் அது பிசைஞ்சு விட்டுக்கணும் .... அதுக்கப்புறம் அதுல கொஞ்சம் அந்த பூவெல்லாம் எடுத்து போட்டுட்டு ... அதுக்கப்புறம் அதுல சூடத்தை கொளுத்திக்கலாம் ... இல்லனா ! அடுத்த வாட்டி பண்ணிக்கலாம் .... அதுக்கப்புறம் பித்ரு இருக்கிற மகாவிஷ்ணு ... என் முன்னோர்கள் தாய் வழி தந்தை வழி அனைத்து வழியிலும் இருக்கும் முன்னோர்கள் .... இது வந்து தர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் என்று ஆசைப்படுகிறேன் சொல்லி வேண்டிக்கணுமா .. எனக்கு இருக்கிற எல்லா பிரச்சனையும் கடன் பிரச்சினை மனப்பிரச்சனை ... அது மட்டும் இல்ல .... என் வம்ச வழியையும் நல்லா இருக்கணும் ... ஒன்னு ரெண்டு மூணு இப்படி வேண்டிக்கோங்க .. ம்ம் ... அந்த பிண்டத்தை தட்டுல எடுத்து வச்சுக்கோங்க ... இப்ப வாங்க ஆத்தங்கரைக்கு போகலாம் ... ம்ம் ... இதுல இங்க வச்சிடுமோ அதை ... ம்ம் ... பேர சொல்லிட்டு கருப்பு எள் அதையும் கையில வெச்சிட்டு தண்ணிய விட்டுட்டு நான் சொல்றத சொல்லுங்க ... தர்ப்பணம் சமர்ப்ப யாமே அப்பா அசோகன் .. தர்ப்பணம் சமர்ப்ப யாமே அம்மா மாதவி .. தர்ப்பணம் சமர்ப்ப யாமே தங்கச்சி ருத்ரா .... தர்ப்பணம் சமர்ப்ப யாமே கணவன் ஆதி ... சொல்லிக்கிட்டு தண்ணிய ஊத்துமா .. ம்ம் .. கையில வச்சிருக்க அந்த அருகம்புல் அதையெல்லாம் அதுல வச்சிட்டு ... ம்ம் ... அதுக்கப்புறம் அதை எடுத்துட்டு ... மறுபடியும் மகாவிஷ்ணு ... முன்னோர்கள் ... இதெல்லாம் சொல்லிட்டு .... இனிமே பிரச்சினையும் வரக்கூடாது .... இனிமே நானும் என்னோட வம்சவழியும் நல்லா இருக்கும் சொல்லிட்டு ... நீங்க இத ஏத்துப்பீங்கன்னு நம்புறேன் ... அப்படின்னு சொல்லிட்டு அந்த பிண்டத்தை கரைச்சு விட்டுட்டு வாம்மா ... இனிமே உன் வாழ்க்கைல நல்லதே நடக்கும் .. சந்தோஷமா வீட்டுக்கு போடா ... அதற்கு ஒரு சிரிப்பை மட்டும் உதித்தவள் ... மறு வார்த்தை எதுவும் பேசவில்லை ... அவளின் உலகமே அவர்கள் தானே ... அவர்களுக்கு இப்படி பிண்டத்தால் செய்து விட்டு வந்ததே நினைத்து மனம் வருந்தினாலும் .. அவர்கள் அங்காவது நிம்மதியாக இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் தான் ... அவளின் ஒரே வேண்டுதல் .... என்ன உங்க கூட சீக்கிரமா கூட்டிட்டு போங்க ... உங்க கிட்ட கேட்கிறது அதுதான் ... என்று சத்யா சொல்லிக்கொண்டே இருக்கும்போதே கடலலை அவளை உள்ளிழுக்க ... அடுத்த நொடியே ஒரு கை நீண்டு அவளை தன்னுள் அணைத்துக் கொண்டது ... அது வேறு யாரும் இல்லை அவன் தான் அவனே அவன் கிரிஷ் ... சற்று நேரத்தில் அவன் இதயத்தில் இளைப்பாரிக் கொண்டிருந்த அவளை ... பார்த்து மனம் ஆறுதல் அடைந்தாலும் ... அவளின் இந்த நிலை அவனை உருகுலைய வைத்தது தான் உண்மை ... என்னவோ என்னவாக இருந்து போகட்டும் .... இதற்கு மேலும் அவள் கண்ணீர் சிந்த கூடாது ... என்பதை அவனின் எண்ணம் ... இது நடக்குமா ??? ... என்பது கடவுள் சித்தம் தான் ... அடுத்த நொடியே போகலாமா ... ம்ம் ... சிறிது நேரத்துக்கு முன்பு .... இவங்க சண்டே இப்போ தீர்க்க முடியாது ... சத்யா நானும் வரேன் ... என்று சொல்லிக்கொண்டே கிரிஷும் அங்கிருந்து சென்றுவிட ... டேய் ! யாருடா வச்சுப்பா மரியாதையா பேசு அவ்வளவுதான் ... நான் துர்கா டா ... பார்த்து பேசு ... என்று விரல் கொண்டு எச்சரிக்க ... ஏய் ! நான் யாருன்னு தெரியாம என்னை பார்த்து கை நீட்டறியா ??? ... நீ யாரு ??? ... என்ன வேணா இருந்துட்டு போ ... ஆனா ! தேவையில்லாம பேசுற ??? ... அவ்வளவுதான் கட் பண்ணி விடுவேன் ... என்னடி கட் பண்ணுவ ?? ... செஞ்சி காட்டவா ... ராஸ்கல் பார்த்து பேசு டா பொறுக்கி .. என்னடி வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி ன்னு சொல்ற ??? .. ம்ம் ... பொறுக்கி என்ன பண்ணுவான் காட்டவா ??? ... ஏய் ! என்ன மிரட்டுரியா ??? ... அவ்வளவுதான் வச்சுக்கோ ... நான் யாருன்னு தெரியுமா ??? ... நான் யாருன்னு உனக்கு தெரியாது இல்ல ... இப்ப குரு பாக்க போற டி ... என்னடா பண்ணுவ ???? ... என்னடா பண்ணுவ ???? ... என்ன பண்ணுவ நான் கேட்கிற ??? ... இதுவரைக்கும் யாரும் விரல் நீட்டி கூட என்கிட்ட பேசினது கிடையாது ... ஆனா ! நீ பேசுனது பிடிச்சிருக்கு ... என்ன ??? ... ஏய் இப்ப எதுக்கு கிட்ட வர .... நகண்டு போ ... டேய் ! சொல்றேன்ல முதல்ல வெளியே போ இங்க இருந்து ... நான் வெளியே போகணுமா ... இது என்னோட கார் டி ... ஆமா ! இல்ல ... சரி நான் வெளிய போறேன் ... என்று எழ முற்படும் பொழுது ... அவளை இழுத்து இன்னும் நெருக்கமாக தன் மடி மீது கொண்டு வந்த அவனோ ... டேய் ! என்ன பண்ற விடு ... பொறுக்கி பொறுக்கி ... முதல்ல என்ன விடு ... . முடியாதுடி பொறுக்கின்றத காட்ட போறேன் ... ப்ளீஸ் ... கிட்ட வராத ... நா ... நான் சொல்றதை கேளு ??? ... முடியாது டி ... உன் கண்ணுக்கு இப்ப நான் பொறுக்கியா தானே இருக்கிற ... அதான் உன்னோட விருப்பப்படியே ... என்னோட விருப்பமா சீ .. என்னடி அதுக்குள்ள சீ சொல்லிட்ட . .. இன்னும் ஒன்னு பண்ணலையே ... என்று பெண் அவளின் இதழை நெருங்கியதுதான் தாமதம் ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️ ❣️ ❣️ தொடரும் ... "கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா ❣️❣️❣️", - பிரதிலிபியில் படிக்க :, https://tamil.pratilipi.com/series/ #pratilipi கதைகள் உலகம் #ebooks pratilipi #pratilipi #pratilipi page social #pratilipi stories கோகுலத்து-கண்ணா-கண்ணா-சீதை-இவள்-தானா-nuo55wadyegx?language=TAMIL&utm_source=android&utm_medium=content_series_share இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்