RamaswamyAnnamali
597 views
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #ஸ்ரீராம் ராமனால் வாசுகி பெற்ற பலன்*... ஒரு செயல் ஒரே சமயத்தில் சிலருக்கு மகிழ்ச்சியும், சிலருக்குத் துயரமும் தருவதுண்டு . இப்படித்தான் திருப்பாற்கடலை கடைந்த போது அமுதம் கிடைத்ததில் தேவர்களுக்கு மகிழ்ச்சி, அசுரர்களுக்கு துயரம். அமுதம் கிடைக்க உதவியாருந்த வாசுகிக்கும் துயரம் தந்ததே. தனது உடற்சோர்வு நீங்க மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகே சென்று ஓய்வு எடுத்தான். அங்கு தான் வாலி வர மாட்டான் என்ற தைரியமும் இருந்தது. எம்பெருமான் மோகினி அவதாரத்தை முடித்து வாசுகியிடம் வந்தார். அவனோ அவர் வந்ததைக் கூட அறியாமல் வலியில் புரண்டு கொண்டிருந்தான். பகவான் வாசுகியிடம் " வாசுகியே , நல்ல காரியத்திற்கு உதவியிருக்கிறாய் . இந்திரன் உன்னை மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். நீ வேண்டும் வரம் கேள் " என்றார். " எம்பெருமானே, தேவகாரியத்திற்கென்று இசைந்தேன் , ஆனால் தேவர்கள் என்னை லட்சியம் செய்யவில்லை. வாலியை விட்டு இழுக்கச் செய்து பழிவாங்கிவிட்டனர். உடலெல்லாம் காயம், மூச்சு விடவும் முடியவில்லை என்று கூறினான். "எம்பெருமானே , இந்த வலி மறக்கும் அளவுக்கு நீண்ட உறக்கம் தேவை அதை அருளுங்கள் ". " பகவான் அதற்கு , வாசுகி நீ யுக யுகமாக உறங்குவாய் " என்று வரமளித்தார். மேலும் ஓர் வரமும் பெற்றுக்கொள் என்றார். வாசுகி மிகுந்த கோபத்துடன், "சுவாமி உறங்கி எழும் போது வாலி மாண்டு ஒழிந்தான் " என்ற செய்திதான் என் காதில் விழ வேண்டும்" என்றான். "அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார் மாயவன். இவ்வாறாக திருப்பாற்கடல் கடைந்த போதே வாலி வதத்திற்கு நாள் குறிக்கப்பட்டு இராம அவதாரத்தில் நிறைவேற்றப்பட்டது.🌹