RamaswamyAnnamali
726 views
3 months ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் *நவராத்திரி* *ஒன்பதாம் நாள்* *சித்திகளை அருளும் ஒன்பதாம் நாளான சாமுண்டி* *பூஜை* *அம்மன் வடிவம் :* சாமுண்டி *பூஜையின் நோக்கம்* : சும்ப நிசும்ப வதம் புரிய செல்லுதல். *அம்மன் வடிவம் :* தெத்துப்பல் கொண்ட திருவாயை உடையவள். முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை வதம் செய்ததால் சாமுண்டி என்று அழைக்கப்படுகிறாள். மிகவும் சினம் கொண்டவள். தர்மத்தை காக்க கோபமாக இருப்பவள். தென்னாட்டில் ஒன்பதாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் : தீப துர்க்கை. யோகிகள் யோகத்தால் தவத்தை உணர்ந்து மெய்ஞானம் என்னும் ஞான ஒளியை அளித்து விளக்கு போல் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதால் தீப துர்க்கை என்று அழைக்கப்படுகின்றாள். *பூஜை விவரங்கள்* *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* : தாமரை *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை :* மரிக்கொழுந்து *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : வெள்ளை நிறம் *அன்னையின் அலங்காரம்* : சுபத்ராதேவி அலங்காரம் *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :* வெண் மலர்கள். *கோலம்* : கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போட வேண்டும். *நைவேத்தியம் :* அக்கார வடிசல் *குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* : 10 வயது *குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்* : சௌபாக்கியம் உண்டாகும். *பாட வேண்டிய* *ராகம்* : வசந்தா *நடனம்* : கோலாட்டம் *குமாரிக்கு தரவேண்டிய* *பிரசாதம் :* திரட்டுப்பால் *பலன்கள்* : இஷ்ட சித்திகளை அருளக்கூடியவள். 🙏🪷🙏