நவராத்ரி ஸ்பெஷல்
214 Posts • 287K views
RamaswamyAnnamali
4K views 15 hours ago
#நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை #பத்திஸ்டேட்ஸ் *புரட்டாசி மாதம் 10ம் நாள் 26-செப்டம்பர்-25, ப்ருகு வாரம் வெள்ளிக்கிழமை* *நவராத்திரி ஐந்தாம் நாள்* *அன்று* புனிதமாக அம்பிகையை வைஷ்ணவி மற்றும் ஸ்கந்தமாதா அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர் அன்னம், கிளி போன்ற பறவை வகை கோலம் வரைந்து அம்பிகையை வழிபட வேண்டும். மலர் மனோரஞ்சிதம் பாரிஜாதம் மலர் மாலைகள் சாற்றி திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அர்ச்சனை செய்து, . நைவேத்தியமாக தயிர்சாதமும், பூம்பருப்பு சுண்டல் கடலை பருப்பு சுண்டல் மாதுளை பழம் படைத்து வழிபட வேண்டும். . இந்த நாளில் அம்பிகைக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். நவதுர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 5 ஆம் நாளுக்கு தேவியின் ஸ்கந்த மாதா ரூபத்தில் வழிபடவேண்டும் வைஷ்ணவி தேவி சங்கு, சக்கரம், கதை, வில் பொற்கரங்களில் ஏந்தியவளே . கருடன் வாகனத்தில் அமர்ந்து விஷ்ணு ஸ்வரூபமாக அபூர்வ தரிசனம் தருபவளே துன்பங்கள் நீங்கி, குறைவில்லா செல்வத்தோடு பேரின்ப மோக்ஷம் கிடைத்திடுமே "ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்" என்று மந்திரம் சொல்லி தியானித்து பணிந்திடுவோம் ஸ்கந்தமாதா பக்தி செய்த தேவர் துயர் தீர்த்திடவே பரமனை வேண்டிடச் செய்தவளே சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே வீணரை வென்றிட சேயினைப் பணித்து வேலினைத் தந்திட்ட சக்தி துர்க்கையளே! ஸ்கந்தமாதா வெனச் சிம்மத்திலமர்ந்து குமரனை ஆறுமுகனை மடியினில் கொண்டவளே மேல் வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே மற்றிரு கைகளில் மலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜத்தாளே நவநாயகியரில் ஐந்தாம் நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்திடுவோம் 🪷🪷🪷
44 likes
36 shares
RamaswamyAnnamali
534 views 15 hours ago
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி பூஜை *நவராத்திரி* *ஐந்தாம் நாள்* சௌபாக்கியம் அருளும் ஐந்தாம் நாளான வைஷ்ணவி பூஜை *அம்மன் வடிவம்* : வைஷ்ணவி. *பூஜையின் நோக்கம்* : தூத சம்வாதம். *வைஷ்ணவி வடிவம்* : கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள். தென்நாட்டில் ஐந்தாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சபரி துர்க்கை. அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்க வேட்டுவ உருவம் தரித்து சென்ற சிவபெருமானுடன் அவருக்கு துணைவியாக சென்ற அம்பிகையின் தோற்றம். சபரி என்றால் வேட்டுவக் குலப்பெண் என்று பொருள். வேட்டுவச்சியாக அம்பிகை தரித்த கோலமே சபரி துர்க்கை ஆகும். வனத்தில் வசித்து ஞானத்தை அருளக்கூடியவள். பாவங்களைப் போக்கி அருளை அளிக்கக்கூடியவள். *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* : பாரிஜாதம். *அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* : விபூதி பச்சை. *அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : பச்சை நிறம். *அன்னையின் அலங்காரம்* : சுகாசனத்தில் காளி துர்க்கை அலங்காரம். *அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :* மல்லிகை மற்றும் முல்லை மலர்கள். *கோலம் :* கடலை மாவு கொண்டு பறவை கோலம் போட வேண்டும். *நெய்வேத்தியம் :* தயிர் சாதம். *குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* : 6 வயது. *குமாரி பூஜையினால் உண்டாகும்* *பலன்கள் :* கவலைகள் அகலும். *பாட வேண்டிய ராகம்* : பந்துவராளி. *பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி* : ஜல்லரி. *குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* : அப்பளம். *பலன்கள்* : சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 🙏🪷🙏
12 likes
15 shares
RamaswamyAnnamali
968 views 5 days ago
#🙏🏻புரட்டாசி மாதம்✨ #பத்தி #நவராத்ரி பூஜை #நவராத்ரி ஸ்பெஷல் மாதம் 06ம் நாள்* 22-செப்டம்பர்-25 சோமவாரம்- திங்கள் கிழமை* நவராத்திரி பூஜை தினம் புனிதமான வடிவங்களில் துக்கத்தைப் போக்குபவளாக துர்க்கை, செல்வத்தைப் பொழிபவளாக லட்சுமி. புனித ஞானத்தை நல்குபவளாக சரஸ்வதி, இந்த மூன்று சக்திகளின் ஸ்வரூபமாக அம்பிகையை பணிவோம் சூரியன் கன்னி ராசியில் தோன்றும் புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி திதியில் நிறைவு பெரும் விழா வீடுகள் தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா சாரதா நவராத்திரி பூஜிப்போம் இயற்கை மாறுபாட்டால் பலவிதநோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்க இறையருளை நாடிடுவோம் வாரீர் ஆணவம் அழிந்த நாள், மூர்க்கம் முடக்கப்பட்ட நாள், பெண்மை வென்ற நாள் என போற்றி பாடிடுவோம் வாரீர் சக்தி ஸ்வரூபிணி அம்பிகை ஸ்ரீ துர்க்கா, லக்ஷ்மி , சரஸ்வதி எனும் முப்பெரும் சக்தியாக தோன்றினாள் போற்றி மகேஸ்வரி, கௌமாரி, வராகி , மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி போற்றி அம்பிகையை ஒன்பது வடிவங்களில் தியானித்து, பூஜித்து, பாடி சுண்டல் சித்ரான்னம், பழங்கள் நிவேதனம் செய்து நம் துன்பங்கள் நீங்கி குறைவற்ற செல்வ சௌபாக்கியங்கள் பெற்று முக்தி ஞானத்தை அடைந்திடுவோம் போற்றி
12 likes
10 shares