குவைத்தில் இந்திய தம்பதிகளின் 9 மாத குழந்தை உணவு தொண்டையில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது:
குவைத்தில் தொண்டையில் உணவு சிக்கியதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய குழந்தை உயிரிழந்துள்ளது. கேரளா மாநிலம் கொயிலாண்டியைச் சேர்ந்த மலையாள தம்பதியினரான ஜாவத் மற்றும் ஜம்ஷினா தம்பதிகளின் மகனான 9 மாதங்களான எஸ்ரான் என்ற குழந்தையே இன்று(21/11/25) வெள்ளிக்கிழமை காலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தது.
தங்களுடைய குடியிருப்பில் வைத்து சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குவைத்தில் உள்ள அதான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த துயரமான செய்தி குவைத்திலுள்ள இந்திய சமூகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
#🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️