ரவிசங்கர் ராஜா, ஆரணி
2.4K views
🌹🌹திருவிளையாடல் புராணம்🔱🔱 சிவ கீதை: உ சிவகீதை            ..அத்தியாயம் 2           ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ 🙏🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏🙏 சனாதன தர்மத்தின் முதல் குரு வியாசர் முனிவர் பாதம் பணிந்து 🙏🙏🙏 🌹சிதம்பரம் ரகசியம் என்பது பூமியின் மையப்புள்ளி ஈசனின் பாதத்தில் இருப்பது அல்ல..... 🌹ஈசனை அறிந்தால் மற்றுமே ஈசனை இயக்குகின்ற சக்தியை அறிய முடியும் 🙏🙏🙏 🔱முதல் அத்தியாயத்தில் சிவகீதையின் மகத்துவத்தையும், சூதமாமுனிவர் மற்ற முனிவர்களுக்கு தேவர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்து எப்படி சிவனடி சேர்வது என்றும் கூறினார். ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘ ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 🐦‍🔥இந்த இரண்டாம் அத்தியாயத்தில் முனிவர்கள் சூதமாமுனிவரை பார்த்து சூதரே ! தாங்கள் அகத்தியரின் உபதேசத்தால் ஸ்ரீ ராமன் சிவனாரை நோக்கி விரதமிருந்து பூஜித்து அவரை கண்டு சிவகீதை உபதேசம் பெற்றார் என்று சொன்னீர்கள். 🐦‍🔥அது போல " அகத்திய மஹரிஷி ஏன் ஸ்ரீ ராமனிடம் வந்தார்? எவ்வாறு விரத தீக்ஷையை செய்து வைத்தார் ? அதனால் ஸ்ரீ ராமன் என்ன பயனை அடைந்தார் ? என்பதை கூற வேண்டும் என்று வேண்டினர். 💋சூதர் கூற துவங்கினார், ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ ⚜சீதையை இராவணன் அபகரித்து சென்றதும் ஸ்ரீ ராமன் மிகுந்த துயரம் அடைந்து இரவும், பகலும் பசி, தூக்கம் இன்றி புலம்பி கொண்டிருந்தார். பின்பு ராமன் தன் உயிரை விட்டு விட விரும்பினார். ⚜இதையறிந்து லோபா முத்திரையின் கணவரான " அகத்தியர் " ராமரிடம் வந்தார். அகஸ்தியர் சம்சாரம் துச்சமென்பதை ராமருக்கு போதித்தார். ராமா துக்கப்படாதே, பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய இந்த உடல் ஜடம் என்பதை நீ அறியவில்லையா ? எதிலும் ஒட்டாத, எங்கும் வியாபித்திருக்கும் சத், சித், ஆனந்த வடிவமான ஆத்மா உண்டாவதும் இல்லை, அழிவதும் இல்லை. ⚜மலபிண்டமாகவும், ஜட உருவமாகவும் உள்ள இந்த தேகத்திலிருந்து உயிர் போய் விட்டால் இந்த உடல் கட்டைகளோடு எரிக்கபடுகிறது. அழியக்கூடியது உடல் மட்டுமே என்பதை அறியாமல் இருக்காதே. அத்தகைய உடலை பிரிவதால் என்ன துயரம் உள்ளது? ஒரு பெண் அனைத்து அழகுடன் இருந்தாலும், இனிய குரலை கொண்டிருந்தாலும், கண்களில் மன்மத பாணங்களை எய்பவளாக இருந்தாலும் அவளை கண்ட உடன் அவளுக்கு வசப்படும் மூடனுடைய அஞ்ஞானத்தை கூறுகிறேன். ⚜ஆத்மா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல. ஆத்மாவுக்கு உருவம் இல்லை. அது எங்கும் நிறைந்துள்ளது. அனைத்து அழகுடனும் காணப்படும் அழகி என்பவள் வெறும் மலபிண்டம், ஜட உருவம் தான் என்பதை அறிந்து கொள். ⚜ராமா, அவளுடைய தேகத்தை வெறும் தோல் மாத்திரம் என்று அறிந்து அவளை ஒதுக்குவாயாக. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் ஆன இந்த உடலில் ஆத்மா வெறும் சாட்சியாக இருக்கிறது. ⚜தேகங்கள் தான் அழியும். ஆத்மா அழியாது. கொலைசெய்பவனோ கொல்வதாக நினைக்கிறான். கொல்லப்படுபவனோ இறப்பதாக நினைக்கிறான். உண்மையில் கொல்வதும், கொல்லபடுவதும் இரண்டும் இல்லை என்பதை அறிந்து உன் உண்மை சொரூபத்தைஅறிந்து துக்கத்தை விடு என்று சொன்னவுடன் ராமர் அகத்தியரிடம் முனிவரே நான் என் மனைவி பிரிவால் துயரம் எனும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். ⚜ அது இல்லை என்று நீங்கள் கூறுவதை நான் எப்படி நம்புவேன்? ஜீவன் துக்கத்தை அனுபவிக்கும் போது அனுபவிப்பவன் என்று ஒருவனும் இல்லை என்று கூறினீர். பிறகு யார் தான் அதற்கு காரணம்? என்றார் ராமர். ⚜அதற்கு அகஸ்தியர் எந்த மாயையால் உலகம் பிரமிப்படைகிறதோ அந்த சிவனாரின் மாயையே காரணம் என்பதை அறிவது மிக கடினம். மாயைதான் அனைத்திற்கும் காரணம். மாயையை வசப்படுத்தியவரே ஸ்ரீ பரமேஸ்வரர். 🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥 ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சிவ ஓம் 🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥🐦‍🔥 🐦‍🔥நான்கு அந்தகரணங்களை (புத்தி, மனம், சித்தம், அகங்காரம்) பிரதிபலிப்பவர்களாக ஜீவர்கள் தத்தம் கர்ம பலனை அனுபவித்த படி ஜீவிப்பார்கள்.ஜீவர்கள் கர்மபலன் படி சுகதுக்கத்தை அனுபவிக்க இந்த சரீரத்தில் உள்ளனர். 🌹இந்த உடலானது இரண்டு வகைப்படும். (ஸ்தாவரம், ஜங்கமம்). இதில் ஸ்தாவரம் என்பது மரம், செடி, கொடி போன்றவை. ஜங்கமங்கல் என்பது மூட்டை, புழுக்கள், கருப்பை இந்த மூன்றிலிருந்து தோன்றுவன. நல்வினை பயன் கொண்டவர்கள் கருப்பை வழியே உடலை பெறுவார்கள். தீவினை பயன் கொண்டவர்கள் தாவரம், மற்ற சரீரத்தை அடைவர். ஜீவன் சிவனாரின் மாயையால் மயங்குகிறான். 🌹ஜீவன் கனவு, விழிப்பு எனும் இரு நிலைகளில் கட்டுபடுகிறான். தூக்கத்தில் ஆனந்தத்தை அடைகிறான். மாயையால் சுகதுக்கத்திற்கு ஜீவனே காரணமாகிறான். ஆகையால் விசாரித்து அறியும் அறிவால் இங்கு ஒருவனும் துக்கத்தை அடைபவன் இல்லை. ஆதலால் ராமா நீர் துக்கத்தை விட்டுவிடு என அகஸ்தியர் போதித்தார்.  🌹ராமர் அதற்கு முனிவரே தாங்கள் கூறியது அனைத்தும் உண்மைகளே. எப்படி அஞ்ஞானம் நீங்கிய அந்தணரையும் கள்ளானது போதை கொள்ள செய்யுமோ அது போல ப்ராப்த கர்மாவானது விவேகியை கூட விட்டு விடாது. ஆகவே " வாழ்வதற்கு எனக்கு வழி கூறுங்கள் " என்று ஸ்ரீ ராமன் அகஸ்தியரிடம் கேட்டார். ......தொடரும்....... 🌹🌹 ஐயா சிவ சிவ அரகர அரகரா 🌹🌹 ☘☘ ஓம் சிவ சிவ ஓம் ☘🍀 🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏 🚩🕉🪷🙏🏻 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 #🙏🏼ஓம் நமசிவாய #சிவபுராணம் #சிவ கீதை #🕉ஓம் நமசிவாய 🕉 #🤔 ஆன்மீக சிந்தனைகள்