-
867 views
#நதி காலம் என்ற நதி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடுவது போதுதான் நதி. தேங்கிவிட்டால் குளம் ஓடும் நதிதான் பயன்பாட்டிற்குரியது. நதியின் பயணமாய் உங்கள் வாழ்க்கை இருக்கட்டும். எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும், எதையும் தைரியமாகச் செய்யும் குணம் இல்லையென்றால் திறமை பயனற்றுப் போகும். அந்த தைரியத்தை மன உறுதியால் பெறலாம். செய்யும் செயல்களுக்கு விரும்பிய பலன் கிடைக்காவிட்டால் சோர்வு தொற்றிக் கொள்ளும், அப்போது மன உறுதி தான் நம்மைத் தூக்கி நிறுத்தும். சோகங்களைச் சேர்த்து வைக்காமல் செலவு செய்துவிடுங்கள் அப்போது தான் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். சின்னக் கல் பட்டாலும் உடையும் கண்ணாடியாய் இருக்காதீர்கள்.பெரிய மரமே விழுந்தாலும் உடையாத பாறையாய் இருங்கள் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த மூன்று ஆயுதங்கள் உங்களைப் பாதுகாக்கும்.