பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும், 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், மிகுந்த மனமகிழ்வும் அடைந்தேன்.
பிறந்த தமிழ் மண்ணிற்கும், பேணி வளர்த்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புத்தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிசா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் மேலும் பல பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
ஒலிம்பிக் போட்டியில் பெற முடியாத தங்கப்பதக்கத்தை வென்றதோடு, இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று இந்தியப் பெருநாட்டினைப் பதக்கப்பட்டியலில் முன்னிலைப்படுத்திச் சாதனை புரிந்துள்ளதன் மூலம் பாரா ஒலிம்பிக் வீரர் – வீராங்கனைகள், தாங்கள் மாற்றுத்திறன் படைத்தவர்கள் அல்ல; நாங்கள்தான் உண்மையான திறன் படைத்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்!
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
#📺செப்டம்பர் 04 முக்கிய தகவல்📢