#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், மேல் மொணவூர் மதுரா மோட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் 150 வது ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சக்தி கரகம் வீதி உலா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு கிராம மக்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டினை மோட்டூர் ஊர் நாட்டாமைதாரர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தனர்.