#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதலுக்கு வெற்றி பயணம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா அறிமுகப்படுத்தி இணையதளத்தினை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வ.சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. திவ்யான்ஷீநிகம், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. எல். ரெஜினி ஆகியோர் உள்ளனர்.