களம்.
சிறு சிறு விஷயங்களில் கூட சில கருத்து முரண்பாடுகள் எழும் போது, அதை எதிர்கொள்வது என்பது ரொம்பக் கடினமான விஷயம் தான். சில நேரங்களில் நாம் செய்யக் கூடிய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக விமர்சனங்கள் எழும் போது, அதை எதிர்கொள்வது தான் இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, யுவதிகளுக்கும் தேவைப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
இன்றைய இளைஞர்களிடம் ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனைகளும் இருக்கின்றது. அதை நோக்கிய உடல் உழைப்புகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைத் தவிர. அது தான், ‘விமர்சனம்’.
விமர்சனங்கள் என்பது மனிதனுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. விமர்சனங்கள் என்பது முன்னேற்றத்தின் தூண்டுகோல். நம்மை ஒருவர் ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்யும் பொழுது, நம்மிடம் உள்ள குறைகளில் நின்று அணுக முயற்சிக்க வேண்டும்.
அப்பொழுது தான், நம்மிடம் உள்ள பிரச்னைகள் தீரும். சொல்லப்படக் கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் நாம் தவறாகக் எண்ணக் கூடாது. ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். அதனால், அது எந்த இடத்தில் கிடைத்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தரங்கெட்ட விமர்சனங்கள் நமக்கு இழிவாகும். அதற்கு எதிராக எல்லா நேரத்திலும் துணிந்து போராடுங்கள். அது, நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமாகும். 😊😊😊
#⏱ஒரு நிமிட கதை📜 #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #கதை சொள்ளரோம்