கதை சொள்ளரோம்
11K Posts • 13M views
சில நிமிடங்கள் நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?? நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது தன்னைப் பற்றிய அதீதமான உயர்வு மனப்பான்மையே. நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடும் போது தான் நேர்மையாக இருப்பதால் தான் இப்படி நடக்கிறது எனப் புலம்புவது அவர்களுக்கு ஒரு சுகமான உணர்வாகவே ஆகி விடுவதுண்டு. சென்ற வருடம் முழுவதும் நான் எழுதி வந்த ‘இந்த நாள் இனிய நாள்’ தொடரில் முதல் நாளில் இருந்து படித்து லைக் போட்டு வந்த நபர் ஒருவர் நாள் செல்லச் செல்ல தான் எழுதும் பின்னூட்டங்களில் வார்த்தைப் பிரயோகங்களை தாறுமாறாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவரது கல்லூரி நாட்களில் இருந்தே என்னுடைய தொழில்நுட்பப் புத்தகங்களைப் படித்துத் தான் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டதாக சொல்லி இருக்கிறார். ‘நன்றாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் புகழ்கிறார்கள் என்பதற்காக கர்வத்தை தலைக்குள் ஏற்றிக் கொண்டு விடாதீர்கள்...’ என்பது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்க ஆரம்பித்தார். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் ஆணவம் என அனைத்து உணர்வுகளின் கலவையாக இருந்தார். நான் மென்மையாக என் எதிர்ப்பை தெரிவித்த போது தான் தவறு செய்ததற்காக வருத்தப்படாமல், என்னுடைய ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் நீங்கள் இருப்பதால் அறிவுரை சொல்ல வேண்டியது என் கடமை. நான் நேர்மையாக இருக்கிறேன் அதனால் உங்களுக்கு கருத்து சொல்கிறேன் என்ற பிதற்றல் வேறு. இது போன்றவர்கள் தங்கள் வீட்டில் தன் மனைவி குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்கள் எப்படி இவரைப் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று வியந்ததுண்டு. மற்றொருவர் என் பதிவில் ‘டைப்பிங் பிழை’ ஏதேனும் இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டே இருந்து இந்த இடத்தில் எழுத்துப் பிழை உள்ளது என்று சொல்லாமல் கிண்டலாக பின்னூட்டங்களை எழுதுவார். அவரைச் சற்று கடுமையாகவே கண்டித்தேன். ‘நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ எனச் சொல்வதோடு ‘நீங்கள் காக்காய் வெள்ளையாக இருப்பதாகச் சொன்னால் நான் ஆமாம் என்று சொல்லி பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கருப்புத் தான் என நிரூபிப்பேன்... ஏனென்றால் நான் நேர்மையானவன்’ என்ற பிதற்றலில் பின்னூட்டங்கள் வேறு. இங்கு நான் சொன்ன இரண்டு பேருமே 40-45 வயதினர். விடியற்காலையில் 6 – 6.30 மணிக்குள் மொபைலை வைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் இத்தனை அக்கப்போர் செய்பவர்கள் வீட்டில் வேலையே இருக்காதா என யோசித்ததுண்டு. இவர்கள் மனைவிகளை நினைத்து பரிதாபப்படுவதும் உண்டு. வேலைக்குக் கிளம்ப வேண்டாமா, குழந்தைகள் இருந்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல சமையலில் மனைவிக்கு உதவ வேண்டியிருக்காதா என்றெல்லாம் வியந்ததுண்டு. இரண்டு மூன்று முறை வாய்ப்பளித்தும் மாறவில்லை என்றால் Unfriend/Block செய்து விடுவதுண்டு. காலையில் எழுதுவதே மன நிம்மதிக்காக, அந்த நாளின் நல்ல தொடக்கத்துக்காக. அந்த நிம்மதியையும் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்களை ப்ளாக் செய்யாமல் வேறென்ன செய்ய முடியும்? நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடன் செய்வது, பரிபூரண ஈடுபாட்டுடன் செய்வது, வேலைப் பளு எனப் புலம்பாமல் செய்வது, செய்கின்ற வேலைக்காக லஞ்சம் வாங்காமல் இருப்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது இவை தான் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம். நேர்மையாக இருக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது நேர்மையின் அடையாளம் அல்ல. அநாகரிகத்தின் உச்சம். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்! 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
13 likes
16 shares
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (20.02.2026) ....................................................................... *அகத்தில் இருந்து வரும்...!* .................................................................... நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்... அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றி செய்து கொண்டிருக்கிறோம். மிகையான காரியங்களில் கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கிறோம்... சிக்கலான எண்ணங்களால் மனங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படியொரு வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம். மனங்களை சுரண்டும் இந்த வாழ்க்கையைத் தான் நாம் நவீன வாழ்க்கை முறை என்கிறோம்... இத்தகைய சிக்கலான ஓர் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அதன் தாக்கம் நம்மிடம் இருக்கவே செய்யும். ஆனால்!, எண்ணங்கள், செயல்கள், மனப்பான்மை போன்ற அம்சங்களால் நம்மால் நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள முடியும்... நம்மைச் சுற்றி நடக்கும் குழப்பங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். அத்துடன், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் ஊக்கவிக்க முடியும். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதற்குச் சில வழிகள் உள்ளன... நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்யும் போது வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. பிடிக்காத செயல்களை ஏதோ ஒரு வற்புறுத்தல் காரணமாகச் செய்யும் போது வாழ்க்கை சலிப்பாகி விடும்... ஆனால்!, நம்மில் பெரும்பாலானவர்கள் பிடிக்காதவற்றைச் செய்வதற்குத் தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பிடிக்காத வேலை, படிப்பு, உறவு போன்றவற்றை ஏதோவோர் அழுத்தத்துக்குப் பயந்து தொடராமல், பிடித்த விஷயங்களைத் தேடிக் கண்டுபிடித்து அதில் நம் ஆற்றலைப் பயன்படுத்துவோம்... இதைச் செய்யும் போது வாழ்க்கை நமக்குப் பிடித்த வகையில் முழுமையாக மாறி விடும். வாழ்க்கையில் நமது ஆற்றலின் பெரும்பகுதியை மற்றவர்களைத் தீர்மானிப்பதற்காகச் செலவிடுகிறோம். இந்தத் தீர்மானிக்கும் மனப்பான்மை நமக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது... இது ஒருவரிடம் இருந்து மற்றொருவரைப் பிரித்து வைக்கிறது. ஒருவருக்கொருவர் மோதலையும் உணர்வுகள் அளவிலான வலியையும் உருவாக்குகிறது... மற்றவர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்கும் போது, அவர்களை நம்மால் கூடுதல் அக்கறையுடனும் புரிதலுடனும் அணுக முடியும்... இந்தத் தீர்மானிக்காத மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால், உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்... *ஆம் நண்பர்களே...!* 🟡 வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகளைக் கடந்து தான் முன்னேற வேண்டும். ஆனால்!, அந்தத் தடைகளைப் பற்றித் தொடர்ந்து குறைபட்டுக் கொண்டேயிருப்பது எந்த வகையிலும் நமக்கு உதவாது...! 🟡 அத்துடன், இப்படிக் குறைபட்டுக் கொண்டேயிருப்பது, வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதிக்க விடாமல் தடுத்து விடும். அதனால்!, சிக்கல்களைப் பற்றிக் குறைபடுவதற்குப் பதிலாக, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது சிறந்தது...! 🔴 நாம் பிறந்ததிலிருந்தே, நம்மை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நம்மிலிருந்து வித்தியாசமான ஒரு மனிதராக மாற நாம் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்...!! 🔴 நம்மிடம் ஏதோ சிக்கல் இருப்பதாக நாமே நம்பத் தொடங்கி விடுகிறோம். அதனால்!, நமது அகத்திலிருந்து வரும் குரலையும் நம்ப மறுக்கிறோம்...!! ⚫ மற்றவர்கள் நம்மைப் பற்றித் தெரிவிக்கும் கருத்துகளை வைத்தும் நம்மைத் தீர்மானிக்கத் தொடங்குகிறோம். ஆனால்!, உண்மை என்னவென்றால், நமக்கு எது சிறந்தது என்று நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது...!!! ⚫ அதனால், உங்கள் அகத்திலிருந்து வரும் குரலைக் கவனித்து, அது சொல்லும் பாதையில் நடக்கத் தொடங்குங்கள். வாழ்க்கை எளிமையானதாகவும், சிறந்ததாகவும் மாறி விடும்...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
8 likes
10 shares
_*வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம்*_ _*ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.*_ _சின்ன ஒடையாக_ _இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும்._ _*வாழ்க்கையில்*_ _*தோல்வி*_ _*வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்றுவிடக்கூடாது.*_ _பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும்_ _ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்_ _*எந்த ஓய்வும்*_ _*நம்முடைய*_ _*அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்*_ _பணம், புகழ், காதல்,_ _கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே_ _இந்த பயணம் மூலமாகத் தானே கிடைத்தது வெற்றியும்_ _கிடைக்கும்_ _*எல்லோரும் ஒரு சேரக் கைவிட்டாலும்,*_ _*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்,*_ _*நீங்கள் வழிபடும் இறைவன்*_ _*கைகள் உங்களைக் கைப்பற்றும்.*_ _*கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_ _படைக்கும்_ _போதே உங்களை_ _அறிந்தவர் இறைவன்._ _அவருக்கு தெரியும்_ _உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்_ _என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._ _*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள்.*_ _*கருணையைக் கண்களில் வையுங்கள்.*_ _*சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் வெற்றியாகும்.*_ _உலகப் புகழ் பெற்ற_ _நாடகமேதையான ஷா அவர்கள் ஒரு குறுகலான பாதையில் நடந்து கொண்டிருந்தார்._ _எதிரே வந்தவர் ஷாவுக்கு வேண்டாதவர் போலும். எனவே யாருக்கு யார் வழிவிடுவது யார் செல்வது என்ற பிரச்னை மூண்டது._ _*அப்போது எதிரே வந்தவர்,*_ _*"நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் கோபமாக.*_ _உடனே ஷா சற்று புன்முறுவல் பூத்தவராய்_ _"நான் வழிவிட்டு ஒதுங்குவேன்”_ _என்று சொல்லி விலகி நின்றார்._ _எதிரே வந்தவருக்கு_ _நெற்றியடி._ _*இதில் ஷா அவர்களின் சாமர்த்தியம் மட்டும் சம்மந்தப் படவில்லை.*_ _*பிறருக்கு விட்டுக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் குறைந்து போகமாட்டோம்"*_ _*என்ற உண்மையும் சம்மந்தப்பட்டிருக்கிறது.*_ _அறிஞர் ஷாவே விட்டுக் கொடுக்க தயங்கியவராகத் தெரியவில்லை நாம் என்ன ஷாவை விட சாமானியரா அப்படி இருந்தாலும் பரவாயில்லை விட்டுக் கொடுப்பதால் வீண் போகமாட்டோம்._ _*இதைத் தான்*_ _*“விட்டுக்*_ _*கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.*_ _*கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.*_ _நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...._ _*பிறருக்கு விட்டுக்*_ _*கொடுப்பதால் உங்களுடைய*_ _*நற்பெயரை விடமாட்டீர்கள்,*_ _*சுயமதிப்பை விடமாடீர்கள்,*_ _*அறிவை விடமாட்டீர்கள்,*_ _*ஆனந்தத்தை விடமாட்டீர்கள்.*_ _*மாறாக*_ _*அவற்றையெல்லாம் அதிகரித்துக் கொள்வீர்கள்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
13 likes
7 shares