Failed to fetch language order
கதை சொள்ளரோம்
11K Posts • 13M views
சில நிமிடங்கள் நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்குமே பிடிப்பதில்லை என புலம்பும் நபரா நீங்கள்?? நான் நேர்மையாக இருப்பதால் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை என்று சற்றே கழிவிரக்கத்துடன் பேசுகின்றவர்களை மேலோட்டமாக நோக்கினால் அவர்களிடம் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடன் பேசுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது தன்னைப் பற்றிய அதீதமான உயர்வு மனப்பான்மையே. நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்குடைபடும் போது தான் நேர்மையாக இருப்பதால் தான் இப்படி நடக்கிறது எனப் புலம்புவது அவர்களுக்கு ஒரு சுகமான உணர்வாகவே ஆகி விடுவதுண்டு. சென்ற வருடம் முழுவதும் நான் எழுதி வந்த ‘இந்த நாள் இனிய நாள்’ தொடரில் முதல் நாளில் இருந்து படித்து லைக் போட்டு வந்த நபர் ஒருவர் நாள் செல்லச் செல்ல தான் எழுதும் பின்னூட்டங்களில் வார்த்தைப் பிரயோகங்களை தாறுமாறாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவரது கல்லூரி நாட்களில் இருந்தே என்னுடைய தொழில்நுட்பப் புத்தகங்களைப் படித்துத் தான் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டதாக சொல்லி இருக்கிறார். ‘நன்றாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் புகழ்கிறார்கள் என்பதற்காக கர்வத்தை தலைக்குள் ஏற்றிக் கொண்டு விடாதீர்கள்...’ என்பது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்க ஆரம்பித்தார். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் ஆணவம் என அனைத்து உணர்வுகளின் கலவையாக இருந்தார். நான் மென்மையாக என் எதிர்ப்பை தெரிவித்த போது தான் தவறு செய்ததற்காக வருத்தப்படாமல், என்னுடைய ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் நீங்கள் இருப்பதால் அறிவுரை சொல்ல வேண்டியது என் கடமை. நான் நேர்மையாக இருக்கிறேன் அதனால் உங்களுக்கு கருத்து சொல்கிறேன் என்ற பிதற்றல் வேறு. இது போன்றவர்கள் தங்கள் வீட்டில் தன் மனைவி குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்கள் எப்படி இவரைப் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் என்று வியந்ததுண்டு. மற்றொருவர் என் பதிவில் ‘டைப்பிங் பிழை’ ஏதேனும் இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டே இருந்து இந்த இடத்தில் எழுத்துப் பிழை உள்ளது என்று சொல்லாமல் கிண்டலாக பின்னூட்டங்களை எழுதுவார். அவரைச் சற்று கடுமையாகவே கண்டித்தேன். ‘நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே’ எனச் சொல்வதோடு ‘நீங்கள் காக்காய் வெள்ளையாக இருப்பதாகச் சொன்னால் நான் ஆமாம் என்று சொல்லி பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கருப்புத் தான் என நிரூபிப்பேன்... ஏனென்றால் நான் நேர்மையானவன்’ என்ற பிதற்றலில் பின்னூட்டங்கள் வேறு. இங்கு நான் சொன்ன இரண்டு பேருமே 40-45 வயதினர். விடியற்காலையில் 6 – 6.30 மணிக்குள் மொபைலை வைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் இத்தனை அக்கப்போர் செய்பவர்கள் வீட்டில் வேலையே இருக்காதா என யோசித்ததுண்டு. இவர்கள் மனைவிகளை நினைத்து பரிதாபப்படுவதும் உண்டு. வேலைக்குக் கிளம்ப வேண்டாமா, குழந்தைகள் இருந்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல சமையலில் மனைவிக்கு உதவ வேண்டியிருக்காதா என்றெல்லாம் வியந்ததுண்டு. இரண்டு மூன்று முறை வாய்ப்பளித்தும் மாறவில்லை என்றால் Unfriend/Block செய்து விடுவதுண்டு. காலையில் எழுதுவதே மன நிம்மதிக்காக, அந்த நாளின் நல்ல தொடக்கத்துக்காக. அந்த நிம்மதியையும் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்களை ப்ளாக் செய்யாமல் வேறென்ன செய்ய முடியும்? நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடன் செய்வது, பரிபூரண ஈடுபாட்டுடன் செய்வது, வேலைப் பளு எனப் புலம்பாமல் செய்வது, செய்கின்ற வேலைக்காக லஞ்சம் வாங்காமல் இருப்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது இவை தான் நேர்மையாக இருப்பதற்கான அடையாளம். நேர்மையாக இருக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைப்பது நேர்மையின் அடையாளம் அல்ல. அநாகரிகத்தின் உச்சம். அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்! 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்
13 likes
16 shares
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (25.01.2026)* ……………………………………………….............................. *"சந்தேகம் என்னும் நோய்...!"* ................................................................ உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால்!, மனதில் ஏற்படும் "சந்தேகம் என்னும் நோய்" தீர்க்க முடியாத ஒன்று. ஒரு முறை சந்தேகம் வந்து விட்டால் அது பல உறவுகளுக்கு கொள்ளிக்கட்டையாக அமைந்து விடும். நீங்கள் நூறு விழுக்காடு அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்...! இது காதலுக்கும் ,நட்புக்கும், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி, தொழிலாளி உறவுகளுக்கும் பொருந்தும்... எப்போதும் எல்லோரிடமும் நூறு விழுக்காடு அன்பை காட்டுங்கள். சந்தேகம் ஒன்று வந்து விட்டால் நிம்மதி போய்விடும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது... ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது... அந்த பையன் சொன்னான், ''எம்மிடம் இருக்கின்ற பொம்மைகள் அனைத்தையும் உனக்கு தருகிறேன். பதிலாக நீ வைத்திருக்கிற இனிப்புகள் எல்லாவற்றையும் எனக்கு தருகிறயா...? என்று கேட்டான்... குட்டி பெண்ணும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தாள்.அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்து விட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்... குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்... அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை... அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் கொடுத்திருப்பாளா...? இல்லை!, நாம் ஒளித்து வைத்ததுபோல் அவளும் ஏமாற்றி இருப்பாளா...? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவதியுற்றான்... சந்தேகம் ஒருவர் மனதை பற்றிக்கொண்டால், அது மன நோயாக மாறிவிடுகிறது... *ஆம் நண்பர்களே...!* 🟡 *சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள், தன்னால் அதை செய்ய முடியமா...? இதை செய்ய முடியுமா...? என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்...!* 🔴 *ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால், மகிழ்ச்சி பின் வாசலால் போய்விடும் என்பார்கள்...!!* ⚫ *ஆம்!, இன்று சந்தேகம் என்ற மனநோய் சமூகத்தில் நிலவி வரும் ஒரு நச்சுக் கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்று விடும்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #பொழுது போக்கு #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்#
14 likes
11 shares
_*வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம்*_ _*ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.*_ _சின்ன ஒடையாக_ _இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும்._ _*வாழ்க்கையில்*_ _*தோல்வி*_ _*வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்றுவிடக்கூடாது.*_ _பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும்_ _ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்_ _*எந்த ஓய்வும்*_ _*நம்முடைய*_ _*அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்*_ _பணம், புகழ், காதல்,_ _கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே_ _இந்த பயணம் மூலமாகத் தானே கிடைத்தது வெற்றியும்_ _கிடைக்கும்_ _*எல்லோரும் ஒரு சேரக் கைவிட்டாலும்,*_ _*இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்,*_ _*நீங்கள் வழிபடும் இறைவன்*_ _*கைகள் உங்களைக் கைப்பற்றும்.*_ _*கடைசி வரை உங்களைக் காப்பாற்றும்.*_ _படைக்கும்_ _போதே உங்களை_ _அறிந்தவர் இறைவன்._ _அவருக்கு தெரியும்_ _உங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும்_ _என்பது._ _இழந்தது எதுவாயினும் அதை விடச் சிறந்தது உங்களுக்கு கிடைக்கும் கவலையை விட்டொழியுங்கள்._ _*அன்பை அகத்தில் வையுங்கள்.*_ _*ஆசையைப் புறத்தில் வையுங்கள்.*_ _*உண்மையை உள்ளத்தில் வையுங்கள்.*_ _*கருணையைக் கண்களில் வையுங்கள்.*_ _*சிந்தையில் இறைவனை வையுங்கள். அனைத்தும் வெற்றியாகும்.*_ _உலகப் புகழ் பெற்ற_ _நாடகமேதையான ஷா அவர்கள் ஒரு குறுகலான பாதையில் நடந்து கொண்டிருந்தார்._ _எதிரே வந்தவர் ஷாவுக்கு வேண்டாதவர் போலும். எனவே யாருக்கு யார் வழிவிடுவது யார் செல்வது என்ற பிரச்னை மூண்டது._ _*அப்போது எதிரே வந்தவர்,*_ _*"நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் கோபமாக.*_ _உடனே ஷா சற்று புன்முறுவல் பூத்தவராய்_ _"நான் வழிவிட்டு ஒதுங்குவேன்”_ _என்று சொல்லி விலகி நின்றார்._ _எதிரே வந்தவருக்கு_ _நெற்றியடி._ _*இதில் ஷா அவர்களின் சாமர்த்தியம் மட்டும் சம்மந்தப் படவில்லை.*_ _*பிறருக்கு விட்டுக் கொடுப்பதில் ஒருபோதும் நாம் குறைந்து போகமாட்டோம்"*_ _*என்ற உண்மையும் சம்மந்தப்பட்டிருக்கிறது.*_ _அறிஞர் ஷாவே விட்டுக் கொடுக்க தயங்கியவராகத் தெரியவில்லை நாம் என்ன ஷாவை விட சாமானியரா அப்படி இருந்தாலும் பரவாயில்லை விட்டுக் கொடுப்பதால் வீண் போகமாட்டோம்._ _*இதைத் தான்*_ _*“விட்டுக்*_ _*கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.*_ _*கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.*_ _நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...._ _*பிறருக்கு விட்டுக்*_ _*கொடுப்பதால் உங்களுடைய*_ _*நற்பெயரை விடமாட்டீர்கள்,*_ _*சுயமதிப்பை விடமாடீர்கள்,*_ _*அறிவை விடமாட்டீர்கள்,*_ _*ஆனந்தத்தை விடமாட்டீர்கள்.*_ _*மாறாக*_ _*அவற்றையெல்லாம் அதிகரித்துக் கொள்வீர்கள்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
13 likes
7 shares