Islamic Way ❤️ Of Life
525 views
2 days ago
"இன் ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் துல்ஹஜ் பிறை 🌙 ஆரம்பமாகும் குர்பானி கொடுப்பவர்கள் உங்களுடைய அவசிய தேவைகளை அதற்குள் முடித்துக் கொடுங்கள்!! பலருக்கும் எழக்கூடிய கேள்வி என்னவென்றால், 'வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தச் சட்டமா?' அறிஞர்களின் பதில்: "யார் சார்பாக குர்பானி கொடுக்கப்படுகிறதோ அவருக்கு இது. குடும்பத் தலைவர் தம் சார்பாகக் கொடுத்தால் அவர் இதைப் பேண வேண்டும். அல்லது அவரே தமது மனைவியின், பிள்ளையின் சார்பாக தம் பணத்தைக் கொடுத்துச் செய்தாலும், அவர்கள் மட்டும் இதைப் பேண வேண்டும். அனைவரும் அல்ல. 'உங்களில் ஒருவர்' என்றே நபியவர்கள் குறிப்பாக்கினார்கள். யார் கொடுப்பாரோ அவர்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்" என்றார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3997📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3998📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3999📚 #qurbanreminder #hajjreminder #islam #குர்பானிசட்டங்கள் #உழ்ஹிய்யா