SIVAKUMAR M
536 views
3 days ago
சென்னை மாநகராட்சி மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும், உழைத்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது நியாயமல்ல என்று அவர் கூறியுள்ளார். எனவே, நிலுவையில் உள்ள மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன், பணி நிலைப்பு உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளையும் அரசு மற்றும் மாநகராட்சி இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.#vijay #AnbumaniRamadoss #PMK #tvk #🤝பா.ம.க #தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay #👨‍🦰தளபதி விஜய் #📺வைரல் தகவல்🤩