சரவணகுமார்©183
534 views
1 days ago
நிதி பற்றாக்குறையை இவர் 'நீதி' பற்றாக்குறை என வாசிக்கும்போதே இவருக்கு தமிழக அரசின் வரவு செலவினங்களை பற்றி 1% கூட தெரியாது என்பது எல்லாருக்கும் புரிந்து விட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி விட்டுச் சென்ற நிதி பற்றாக்குறை 65,994 கோடி ரூபாய். இப்போது மு.க.ஸ்டாலின் விட்டுச் சென்றுள்ள நிதி பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய். வித்தியாசம் = 12,330 கோடி ரூபாய். ஆனால், மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்தபோது கொரோனா உச்சம் காரணமாக எவ்வளவு நிவாரண உதவிகள் வழங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே சமயம், புதிய நலத்திட்டங்களான மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், கல்வி உதவித்தொகை, பயிர்கடன் தள்ளுபடி போன்ற பல திட்டங்களுக்கு ஆனது எல்லாமே கூடுதல் செலவினங்கள். மேலும், பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசிடம் கேட்டபோது எல்லாம் அவர்கள் மறுத்துவிட்டனர். பல மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்கியபோது... மேற்கு வங்கம் - 0 கேரளா - 0 தமிழ் நாடு - 0 என செய்திகள் வந்ததை யாரும் மறக்க முடியாது. இந்த செலவினங்களை மாநில அரசு தானே ஏற்றுக்கொண்டது...? ஆக, தமிழக அரசில் நிதி சரிவு எல்லாம் ஏற்படவில்லை. இப்படியெல்லாம் எண்ணிக்கைகளை காட்டி, தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்பதே இவர்களின் ஒரே நோக்கம் ஆகும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...நாளை முதல் ஒவ்வொரு அமைச்சரும் இந்த வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி இவர்களின் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாமல் உள்ளதற்கு திமுக தான் காரணம் என பொய்களை பரப்புவார்கள். #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #@அமானுஷ்யம்@( HORROR ) #😅 தமிழ் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல்