https://youtube.com/watch?v=SBo3G4W9BPE&si=d3WugnjAJqka4WZf
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
ரீல்ஸ் போடும் அமைச்சர் ஆரணியில் தமிழிசை கடுகடுப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கவிதா Venkatesan அவர்கள் தலைமையில் ஆரணியில் நேற்று நடந்தது மாவட்ட பொதுச்
செயலாளர் சதீஷ் முன்னாள் மாவட்ட துணை தலைவர் தீனன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்
விவசாய அணி செந்தில்
வரவேற்றார் உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர்
சி வினோத்குமார் சிறப்பு அழைப் பாளராக பாஜ முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்துகொண்டனர்
கூட்டத்தில் தமிழிசை சௌந்தராஜன் பேசியதாவது தேர்தல் தோல்வி குறித்து மாநிலம் முழுவதும் பாஜ ஜனநாயக ரீதியாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகிறது வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜ வலுவான கட்சியாக மாறும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு ரூபாய் 11 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள்
மாநில தலைவர் தமிழசை சௌந்தரராஜன் பேசினார் அருகில் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உட்பட பலர்
திமுக தோல்வி அடைந்ததற்கு எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ந்து குறை
கூறியதுதான் காரணம்
முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற 15 நாளில் மின்சாரம் துண்டிப்பு லஞ்சம் கொலை கொள்ளை பாலியல் வன் கொடுமை என 15 சம்பவங்கள் நடந்துள்ளன தொழில்துறை அமைச்சர்
முதலீடு கேட்கும் அளவுக்கு தமிழகம் அவலநிலையில் உள்ளது
நாட்டில் 21 மாநிலத் தில் பாஜ ஆளுங்கட்சியாக உள்ளது தமிழகத்திலும் பாஜ ஆளும்நிலை விரைவில் வரும் அதிமுக எம் எல் ஏக்களை ராஜினமா செய்யவைத்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை
த வெ கவில் இணைத்து வருவது ஜனநாயகத்துக்கு எதிரானது பிரதமரை
சந்திக்க சென்ற முதல்வர் விஜய்க்கு வெறும் 10 நிமிடம் மட்டும்தான் ஒதுக்கபட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன
பத்து நிமிடத்தில் தமிழகத்துக்கு தேவையான கோரிக்கையை பிரதமரிடம் முதல்வர் கொடுத்துள்ளார்தமிழ் மொழிக்கு பாஜவை
விட யாரும் மகுடம் சூட்ட முடியாது இவ்வாறு பேசினார்