அம்மை ஆச்சி நேசன்
632 views
21 hours ago
திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம் திருக்கோகரணம் அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர் மரம்: வில்வம் கோடி தீர்த்தம் பாடல் எண் 2பண்சாதாரி பேதை மட மங்கைஒரு பங்கிடம் மிகுத்து இடபம் ஏறிய அமரர் வாதை பட வண்கடல் எழுந்த விட ம் உண்ட சிவன் வாழும் இடமாம் மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மாமலர்கள் தூய் கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே. பொழிப்புரை: பேதைமைக் குணத்தையுடைய இளம்பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தின் மேலேறி, தேவர்கள் துன்பத்தில் அழுந்தியபோது கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு சிவபெருமான் காத்தருளினார். அப்பெருமான் வீற்றிருந்தருள்கின்ற இடமாவது பெண்களோடு ஆடவர்களும் வந்து இறைவனின் திருவடிகளை வணங்கி, சிறந்த மலர்களைத் தூவிப் போற்ற, சாத்திய மாலைகளில் வரி வண்டுகள் மொய்த்து இன்னிசை எழுப்பும் கீர்த்தி மிகுந்த திருக்கோகரணம் என்னும் திருத்தலமாகும். #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்