Rationalist
512 views
3 days ago
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்த்தூவி மரியாதை செய்யப்பட்டது. திருச்சியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையிலும், சென்னையில் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையிலும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் அணிதிரண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழையும் சமூகநீதி கருத்துக்களையும் முழக்கங்களாக எழுப்பியபடி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். #💪 மே17 இயக்கம் #தோழர் திருமுருகன் காந்தி #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴