Nethaji
578 views
4 days ago
#ஆன்மிகம் #🙏கோவில் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 29, 2026 திருச்சிற்றம்பலம் *நம்பியாரூரர் அருளிய ஏழாம் திருமுறை* *திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும் - பதிகம்* *பண் : இந்தளம்* *பாடல்* : பாரோடு விண்ணும் பகலும்ஆகிப் பனிமால் வரையாகிப் பரவையாகி நீரோடு தீயும் நெடுங்காற்றும்ஆகி நெடு வெள்ளிடைஆகி நிலனும்ஆகித் தேரோட வரை எடுத்தஅரக்கன் சிரம்பத்து இறுத்தீர்உம் செய்கைஎல்லாம் ஆரோடும் கூடா அடிகேள்இதுஎன் அடியோம் உமக்காட்செய அஞ்சுதுமே. - 7.002.10 *பொருள்* *இறைவனாகிய நீரே பூமி, ஆகாயம், பகல் (சூரியன்) ஆகியவையாக இருக்கிறீர்கள். பனி சூழ்ந்த பெரிய மலைகளாகவும், பரந்த கடலாகவும் இருக்கிறீர்கள். நீர், நெருப்பு, நெடிய காற்று ஆகியவையாகவும் விளங்குகிறீர்கள். பரந்த வெளி மற்றும் நிலம் என ஐம்பூதங்களாகவும் நீரே நிறைந்துள்ளீர்கள். தன் தேர் ஓடுவதற்காக, கயிலை மலையைத் தூக்க முயன்ற அரக்கனாகிய ராவணனுடைய பத்து தலைகளையும் நெரித்து அடக்கிய உமது செயல்கள் யாவும், சாதாரண மனிதர்களின் அறிவுக்குப் பொருந்தாத விந்தையான செயல்களாக இருக்கின்றன. எம்பெருமானே! இத்தகைய பேரற்றல் கொண்ட உமக்கு அடிமை செய்து வாழ நாங்கள் அஞ்சுகிறோம்.* திருச்சிற்றம்பலம் *அருள்தரும் ஆவுடைநாயகி உடனாகிய அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*