saravanan.
521 views
8 hours ago
. "கடன்காரன் " ஆவதை விட பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் . 2. "டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் . 3. "கெட்டவன்" ஆவதை விட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் . 4. "வல்லவன்" ஆவதை விட " நல்லவன்" எவ்வளவோ மேல் . 5. குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் . 6. "காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் . 7. புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் . 8. மாதர் தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் . 9. வெற்றிகளின் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல். 10. பொய்யான "புரட்சி" களை விட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல். வாழ்க வளமுடன் #vaalkkay poraattam.