. "கடன்காரன் " ஆவதை விட பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2. "டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3. "கெட்டவன்" ஆவதை விட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4. "வல்லவன்" ஆவதை விட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5. குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6. "காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7. புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8. மாதர் தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9. வெற்றிகளின் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல்.
10. பொய்யான "புரட்சி" களை விட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.
வாழ்க வளமுடன்
#vaalkkay poraattam.