💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!
இந்த பூமியில் யாரெல்லாம் நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ அவர்களைக் குணப்படுத்தாமல் விட்டுவிடாதே!
ஆடையின்றி இருப்போருக்கு ஆடை அளிக்காமல்விட்டுவிடாதே!
பசியோடிருப்போர்க்கு உணவளிக்காமல் விட்டுவிடாதே!
வறுமையில் வாடுவோருக்கு ரிஜ்க் அளிக்காமல் விட்டுவிடாதே!
தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!
கவலையுடன் இருப்போரை மகிழ்விக்காமல் விட்டுவிடாதே
உன்னை அழைப்போருக்கு பதிலளிக்காமல் விட்டுவிடாதே!
அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி செய்யாமல் விட்டுவிடாதே!
பாவமன்னிப்பு கேட்போருக்கு அவர்களின் பாவங்களை மன்னிக்காமல் விட்டுவிடாதே!
பாவம்செய்தோர்களுக்கு கருணை காட்டாமல் விட்டுவிடாதே!
வழி தவறி செல்வோருக்கு நேர்வழிகாட்டாமல் விட்டுவிடாதே!
யா அல்லாஹ்!
உன்னிடம் கையேந்தி கேட்கிறோம்,உன்னிடமிருந்து தான் எங்களுக்குப் பதில் வரவேண்டும்.
உன்னை விட்டால் வேறு இறைவன் எங்களுக்கில்லை. நீ கைவிட்டால் எங்களைக் காப்பாற்றுவோர் யாருமில்லை!
எங்களின் அன்னையர்களை விட அதிகம் கருணை கொண்டவனே
எங்களின் இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்!
ஆமீன்!
ஆமீன் யாரப்பல் ஆலமீன்!
#🕌இஸ்லாம்