ரவிசங்கர் ராஜா, ஆரணி
969 views
1 days ago
AI indicator
#குரு_பெயர்ச்சி_பலன்கள் #தனுசு வாழும்போது காகத்தைத் துரத்துகிறோம், இறந்த பின் சாமி கும்பிட அதே காகத்தைத் தேடுகிறோம்! சுயநல மனிதனுக்கு தேவைப்பட்டால் மட்டுமே கருப்பும் தெய்வம்! வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க, ஏனோ தெரியவில்லை, பல மனிதர்களின் உதடுகள் எல்லாம் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு மெளனமாகிப் போகிறது. # தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி 'யாராவது எப்படியாவது போகட்டும்' என்ற மனநிலை அவ்வப்போது தேவைப்படத் தான் செய்கிறது. தனுசு ராசிக்கு ராசி நாதன் எட்டாம் இடத்தில் மறைகிறார். பொதுவாக காசிநாதன் மறைவது அவ்வளவு சுபிட்சமான நற்பலன்களை தராது. எனினும் அவர் உச்சம் பெறுவது ஒரு விதத்தில் நன்மை பயக்கும். குரு பகவான் பன்னிரண்டு, இரண்டு, நான்கு ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். குரு பார்க்க கோடி குற்றங்களும் நிவர்த்தி என்பது போல, குரு பகவான் பார்க்கக் கூடிய இந்த இடங்கள் அனைத்தும் வலுப்பெறுகிறது. நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த உள்ள பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வாழ்க்கை மிக சவாலானதாக இருக்கும் போது, நமக்குள்ளே ஆழமான சக்திகளை கண்டறிவதற்கான வாய்ப்புகள் வரலாம்…. சில விஷயங்களில் எதுவும் செய்யாமல் இருப்பதும் ஒரு நல்ல தீர்வே..! பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அமைதியாக இரு. சத்தம் நன்றாகக் கேட்கும். இன்னும் அமைதியாக இரு. ஒரு சத்தமும் கேட்காது. ~ கல்யாண்ஜி ~ வெளிநாடு யோகம் உண்டாகும். வீடு, மனை, வண்டி, வாகன யோகம் அமையும். தாயாரின் உடல்நிலை சீராகும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் ஆதாய அனுகூலங்கள் கிடைக்கும். மாமனார் வழியிலும் உதவி கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனினும் புதிதாக எடுக்கக்கூடிய முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, உறவினர்களிடமோ நண்பர்களிடமோ கலந்து ஆலோசனை செய்த பிறகு எடுப்பது நல்லது. பெண்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டமாக அமைகிறது. பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். நகை வாங்குவீர்கள். வீடு, மனை, வாகன யோகம் அமைகிறது. அரசியல்வாதிகளுக்கு இது ஒரு சுமாரான காலகட்டமாக அமைகிறது. ராசிநாதன் எட்டாம் இடத்தில் மறையக்கூடிய காரணத்தினால் கொஞ்சம் பொறுமையை கையாள்வது நல்லது. எதிலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். பேச்சில் அதீத கவனம் தேவை. மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக அமைகிறது. தொகுப்பு குட்டி வேணுகோபால் திருச்செங்கோடு மங்காளகரமான பாரபவ ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன் உதவி திருநீலக்குடி மற்றும் வைத்திஸ்வாரன் கோவில் சலியமங்கலம் ஐயா அவர்கள் மிக்கநன்றி படிப்பு நல்ல முறையில் வரும். படிப்புக்காக வெளியூர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவருக்கு இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும். படிப்பிற்காக வெளிநாடு வெளியூர் வாழ்க்கை அமையும். கலைத்துறையினருக்கு இது ஒரு நல்ல காலம். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். கடிகாரம் மெதுவாக நகர்ந்தாலும் , வாழ்க்கை என்னவோ வேகமாக தான் செல்கிறது !! பயணங்கள் முடிவடைய!!.... எல்லாவற்றிலும் நாம் நிச்சயமாக இருக்க விரும்புகிறோம் - நம் உறவுகளில், நம் நம்பிக்கைகளில், நம் லட்சியங்களில், நம் எதிர்காலத்தில். இந்த உள்முகச் சிறைகளை நாம் உருவாக்குகிறோம்; அவற்றைத் தொந்தரவு செய்யும் எவருக்கும் எதிர்ப்பைக் காட்டுகிறோம். இந்த பாதுகாப்பு மண்டலங்களை, தொடர்ச்சியாக, பல்வேறு வடிவங்களில், உடைத்து மீண்டும் கட்டியெழுப்புவதே நமது வாழ்க்கையாக உள்ளது. அதனால் நம் மனம் மந்தமாகவும் சோர்வாகவும் மாறுகிறது. பெரும்பாலான மனிதர்கள் மற்றவர்களைக் ஈர்க்க விரும்புகிறார்கள் - தங்களின் சாதனைகள், புத்திசாலித்தனம், மற்றும் அறிவு மூலம்- எந்த வகையிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள கொள்ளவேண்டும் என்று விரும்புகின்றனர். சுதந்திரம் என்பது எந்தவிதமான பாதுகாப்பையும் தேடாதது. ======================== #பரிகாரம் : திருச்சிற்றம்பலம் தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம் பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனேஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை, திருச்சதகம். திருச்சிற்றம்பலம் அனுசரிச்சுப் போ என்கிற வார்த்தை, எவ்வளவு வேதனையும் வலியையும் கொடுக்கும் என்பதை இங்கு யாரும் புரிந்துக் கொள்வதில்லை... குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். #குல_தெய்வம்_காயத்ரி_மந்திரம் இது குலதெய்வத்தின் அருளைப் பெறவும், தெய்வத்தை நம்முடன் எப்போதும் நிலைத்திருக்கச் செய்யவும் சொல்லப்படும் அதிகம் சக்தி வாய்ந்த மந்திரம். குல தெய்வம் காயத்ரி மந்திரம் : ஓம் தீர்க்க நேர்தாய வித்மஹே கேல ஹஸ்தாய தீமஹி தந்நோ குலதேவதா ப்ரசோதயாத்.!.. 🚩🕉🪷🙏🏼 #குரு பெயர்ச்சி #ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️ராசிபலன்

More like this