RamaswamyAnnamali
545 views
8 hours ago
#பத்திஸ்டேட்ஸ் #சிவபெருமான் கால் பதித்த பூமி திருவிடைமருதூர் 17 மீனவன் ஒருவன் ஒரு குளத்தில் மீன் பிடித்து அதனை பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி மீன்களை உயிரோடு அதில் இருக்க செய்து அதனை தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினான். மாலை நேரத்தில் பூமியை இருட்டு சூழ்ந்ததால், ஒரு பெரிய குளம் அருகே இருந்த மரத்தின் கீழ், மாடுகளை வண்டியில் இருந்து அகற்றி, அவற்றை கட்டி அவற்றிற்கு வைக்கோல் வைத்து வண்டியின் அருகேயே படுத்தான். ஸ்ரீ சிவபெருமான் மீனவனின் முன் தோன்றினார். மீன்களை அடைத்து வைத்திருந்த பாத்திரத்தின் மூடியை திறக்க சொன்னார். மூடியை திறந்தவுடனேயே மீன்கள் துள்ளி குதித்து குளத்தில் விழுந்தன. பாத்திரமும் கவிழ்ந்தது. பின்னர் மீன்கள் ருத்திர வடிவம் எடுத்து விண்ணுலகம் சென்றன. அன்று முதல், இந்த தீர்த்தக் குளம் "ருத்ர தீர்த்தம்" என்றானது. "ருத்ரதீர்த்தம்" திருவிடைமருதூர் தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயத்திற்கு பின்புறம் உள்ளது. மீனவனோ இறைவனிடம் தங்களது கட்டளைபடி நான் மீன்களை விட்டு விட்டேன், இங்கே இருந்து சேற்றில் எனது வண்டி போகும் போது, பாரம் இல்லாமல் வண்டி அங்கே இங்கே என போகுமே என்றார். வண்டியில் இருந்த பாத்திரத்தில் செங்கலை அடுக்கி எடுத்துப் போகச் சொன்னார் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி. வீட்டிற்கு வந்து நடந்ததை தனது தாயிடம் சொன்னார் மீனவர், பாத்திர மூடிகளை அகற்றி செங்கற்களை எடுத்து வைக்கலாம் என இருவரும் எண்ணி பாத்திரத்தை திறந்தால் செங்கற்கள் அனைத்தும் தங்கக்கட்டிகளாக இருந்தன. நடந்தவைகளை மன்னரிடம் சொன்னார் மீனவனின் தாய். மன்னர் நேரில் வந்து பார்த்து மீனவனையும் அந்த தாயையும் பாராட்டி நீங்களே அந்த தங்க கட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள், இது இறைவன் உங்களுக்கு அளித்த பரிசு என சொன்னார். திருவிடைமருதூர் தலத்தில் 35 தீர்த்தங்கள் உள்ளன.