ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
573 views
1 days ago
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மும்பை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 பந்துகளை எதிர் கொண்டு 101 ரன்கள் குவித்து சிஎஸ்கே வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் அடித்த முதல் சதமாகவும் இது அமைந்தது. மேலும் சிஎஸ்கே தனது சிறப்பான பந்துவீச்சின் மூலமாக மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய சஞ்சு சாம்சன், தனது ஆட்டம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்போது "மும்பை வான்கடே மைதானத்தில் சதம் அடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தெரிகிறது. எனக்கும் எனது அணிக்கும் இது முக்கியம் ஒரு சிறப்பான தருணமாகும். இப்போதெல்லாம் எனது போட்டி திட்டம் குறித்து விஷயங்களை நான் எளிமையாக வைத்திருக்கிறேன். நான் விளையாட வரும்போது ஆடுகளத்தின் தன்மையை மட்டுமே கவனிக்கிறேன். இன்றைய ஆடுகளத்தை பார்க்கும் போது இது சாதாரண விக்கெட் போன்று இல்லை. பந்து நன்றாக ஸ்விங் ஆனது. எனவே அணிக்கு என்ன தேவை என்ற திட்டமிடுவது இதன் மூலமாக விஷயம் தெளிவாகிறது. பவர் பிளே முடிந்த பிறகு இந்த ஆடுகளத்தின் தன்மை எனக்கு முற்றிலும் புரிந்தது. நாங்கள் பெரிய ஷாட் விளையாடும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். ஆனால் இறுதி வரை ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று உணர்ந்து பொறுப்பை நானே எடுத்துக் கொண்டேன். நான் முதன் முறையாக மஞ்சள் ஜெர்சியை அணிகிறேன். இது எனக்கு மிகவும் புதிய அனுபவம். எனது வாழ்நாளில் வான்கடே மைதானத்தில் இவ்வளவு மஞ்சள் ஜெர்சியை நான் பார்த்ததே இல்லை என்று நினைக்கிறேன். எனவே இந்த அணிக்காக நான் விளையாடுவதில் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்" என்று பேசி இருக்கிறார். #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆 #🏆T20 உலகக்கோப்பை ஜியோஹாட்ஸ்டாரில்🔥 #🏏தோனி Fans Club😍 #🏏சர்பராஸ் கான்😎 #🐯சென்னை Fans Club💛